Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது பெரியாரா? போன் அவரோடது.. டோன் கிறிஸ்தவ மிஷினரியோடதாம்! ஜோசப் விஜய்.. தவெகவைச் சீண்டும் இமக..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கு பார்த்தாலும் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடும், அதன் தலைவர் விஜய் குறித்த பேச்சாகத் தான் இருக்கிறது. இந்த நிலையில் விஜய் தானாக பேசவில்லை கிறிஸ்தவ மிஷனரிகள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பேசியிருக்கிறார் என விமர்சித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

tvk maanadu imk actor vijay

சுமார் 2 மணி நேரம் மட்டுமே மாநாட்டு நிகழ்வுகள் நடந்தாலும் அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்தனர். அவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு உள்ளிட்டவை வழங்கப்படாததால் பலர் மயக்கம் அடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநாட்டு திடலுக்கு வந்த விஜய் தனது கொள்கை தலைவர்களாக பெரியார், காமராசர், வேலுநாச்சியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார். இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர்.

அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், விஜய் தானாக பேசவில்லை கிறிஸ்தவ மிஷனரிகள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பேசியிருக்கிறார் என விமர்சித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ஆன்ந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நேற்று தமிழக வெற்றி கழகம் நடிகர் தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பேசியது முழுக்க முழுக்க லயோலா கல்லூரி ஸ்கிரிப்ட் கிருஸ்தவ மிஷனரி பயிற்சிப் பட்டறை என்று நினைக்கிறேன்.

அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா ? என்று பேசி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கொண்டு வர போகிறோம் என்பதை மறைமுகமாக சொல்லி கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசி திராவிட மாடல் அரசை சும்மா மிரட்டியிருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் அதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே வேளையில் திருடன் கையில் சாவியை கொடுக்க முடியாது. திராவிட மாடல் யாரையும் விலை பேசும். மய்யம் அடிமையானது போல நாளை என்ன வேண்டுமானாலும் ஆகலாம் தவெக. இனி தவெக கட்சி தலைவர் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மாற்று சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சி கருத்துகளை முக்கியமாக ஊடக நண்பர்களின் கேள்விகளுக்கு‌, குறிப்பாக தமிழக மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை இந்த அரசியலை எதிர்க் கொள்ள வேண்டும் ஒடி ஒழிய கூடாது ஒடி ஒழிய முடியாது,

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை தொட்டு இருப்பது, வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களை தொட்டு இருப்பது, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி
அஞ்சலை அம்மாள் அவர்களை மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தொட்டு இருப்பது எல்லாம் பார்க்கும் போது கொள்கையில் நிறைய முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது. குறிப்பாக ஈவெராவை தொட்டு இருப்பது எல்லாம் பார்க்கும் போது இவரது அரசியல் பயண பாதை போக போக தான் தெரிய வரும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் பொருத்து இருந்து பார்ப்போம்” என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+