காதர்பேட்டை சுந்தரத்தை தூக்கிய போலீஸ்..இந்துக்கள் என்றால் இளக்காரமா? என்கிறார் காடே சுப்பிரமணியம்
சென்னை : இஸ்லாம் மதத்தை விமர்சித்ததாக இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை கைது செய்யும் காவல்துறை, இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் பிரபல வணிக பகுதியான காதர் பேட்டை பகுதியில் கடந்த தட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனிதராக கருதப்படும் முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இரு சமுதாயத்தினரிடையே பிரிவினையை தூண்டும் வகையில், செயல்பட்ட சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த நிலையில் இஸ்லாம் மதத்தினர் மனம் புண்படும் வகையில் பேசியதாக காதர் பேட்டை சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் குறித்து விமர்சித்தால் ஹிந்துக்களை மட்டும் கைது செய்யும் காவல்துறை இந்துக்களை விமர்சிப்பவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் இந்து முன்னணி மாநில தலைவரான காடேஸ்வரா சுப்பிரமணி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருப்பூர் காதர் பேட்டை வியாபாரி சுந்தரம் என்பவர் இஸ்லாம் மதத்தை பற்றிய விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்பதாக குற்றம் சாட்டி வழக்கு போட்டு கைது செய்துள்ளது தமிழக காவல் துறை. கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற எத்தனை கைது நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது என்பதை பட்டியலிட முடியும்.
அதே சமயம் இந்து கடவுளை, இந்து சமயத்தை, இந்து சமுதாய மக்களை, நமது நாட்டை, சுதந்திரத்தை கேவலப்படுத்தி நமது சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுபடுத்தி பொது இடத்தில் பேசியவர்கள் மீதும், முகநூலில் பதிவிட்டவர்கள் மீதும் இதே காவல் துறையிடம் பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்முறை ஏற்படும் என்பதால் நடவடிக்கை இல்லை என இந்துக்கள் புரிந்து கொண்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும்? தமிழக அரசின் பாரபட்சம் இதில் அப்பட்டமாக தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் காவல் துறையை ஏவல் துறையாக ஆளும் கட்சி பயன்படுத்தி காவல் துறையின் மூளையை கெடுத்து அடிமைகளாக நடத்தி வருகிறது என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.
அதன் காரணமாக தமிழகத்தில் போதைப் பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், நக்சல், இஸ்லாமிய பயங்கர வாதம் மீண்டும் பகிரங்கமாக தலை தூக்கி வருகிறது. தமிழக முதல்வர் தனது கட்டுப்பாட்டில் அரசு இயந்திரத்தை வைத்து நிர்வகிக்கிறாரா என்ற கேள்வி மக்களிடம் இயல்பாகவே எழுகிறது. எனவே தமிழக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதையும், இந்துக்களை மட்டும் கைது செய்து வழக்கு போட்டு மிரட்டும் பாசிச போக்கையும் கைவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications