'அம்மா’ என்றால் அன்பு.. அன்னையர் தினம் கொண்டாடப்படுவதன் வரலாறு தெரியுமா? இந்த 2 பெண்கள் தான் காரணம்!
சென்னை: அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தின கொண்டாட்டம் தொடங்கியது எப்படி தெரியுமா? அன்னையர் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணியில் அமெரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டப்படுகிறது. அதன்படி மே 12ஆம் தேதியான இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் அன்னையரின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் தினமாக மட்டும் இன்றி, தாய்மையின் தன்னலமற்ற தியாகத்திற்கு மதிப்பு கொடுப்பதை வலியுறுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தாய்மார்களின் நிபந்தனையற்ற அன்பையும் தன்னலமற்ற தியாகங்களையும் மனதார அங்கீகரிப்பதே அன்னையர் தினத்தின் முக்கியத்துவம். குடும்பத்தை வடிவமைத்து, குழந்தைகளை அன்புடனும், அக்கறையுடனும் வளர்க்கும் தாய்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்தும் நாள் இன்று.
பதினாறாம் நூற்றாண்டு பிரிட்டனில் 'மதரிங் சண்டே' கொண்டாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நாளில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் பகுதியில் உள்ள பிரதான தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். அங்கு குழந்தைகள் தங்களுடன் பூக்கள் மற்றும் சிறிய பரிசுகளைக் கொண்டு வந்து அவற்றை தாய்மார்களுக்கு கொடுப்பது வழக்கம்.
தற்போது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் அன்னையர் தினத்தின் தொடக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? அன்னையர் தின கொண்டாட்டத்தில் இரண்டு அமெரிக்க பெண்களுக்கு பெரிய பங்கு உள்ளது. அவர்கள் ஜூலியா வார்ட் ஹோவ் மற்றும் அன்னா ஜார்விஸ்.
அன்னையர் தினம் தோன்றுவதற்கு 1872ஆம் ஆண்டு ஆலோசனை வழங்கியர் ஜூலியா வார்டு ஹோ. இவர் ஒரு சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர் ஆவார். அமெரிக்காவில் நடந்த உள்நாட்டு போரின் நினைவாக நாட்டில் அமைதி வேண்டி, ஜூன் மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும், அதன் பின்னர் அன்னையர் தினம் தொடர்பான குரல்கள் தீவிரமடைந்தன. அன்னா ஜார்விஸின் தீவிர முயற்சியால் தான் உலகம் முழுவதும் தற்போது சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1908ஆம் ஆண்டு தனது தாய் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் காலமான போது, அன்னா ஜார்விஸ் ஏற்பாடு செய்த ஒரு நினைவுச் சேவையுடன் அன்னையர் தினத்திற்கான வரலாறு தொடங்கியது.
அன்னா ஜார்விஸ், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அர்ப்பணிப்புள்ள சமூக சேவகியாகவும் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு உதவி செய்பவராகவும் பிரபலமானவர். தனது தாயின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு, தனது தாயின் பணிகளைப் போன்றே அனைத்து தாய்மார்களையும் கௌரவிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், அன்னையர் தினத்தை அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாளாக நிறுவுவதற்கான பரப்புரையை அன்னா ஜார்விஸ் மேற்கொண்டார்.
அதன் விளைவாக 1914 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுகிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என பிரகடனம் செய்தார். தாய்மார்களை கௌரவிக்கும் அந்த நாளை தேசிய விடுமுறையாகவும் அறிவித்தார். அதன்படியே தற்போது மே 2ஆம் ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய நாளில், அன்னையர் தினத்தை பெயரளவில் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், வாழ்நாளெல்லாம் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் உழைத்துத் தேயும் நம் அன்னையரை பெருமைப்படுத்தும், அவர்களை மனதார மகிழ்ச்சிப்படுத்தும் நாளாகக் கொண்டாடுவோம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications