திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்று சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Holiday Rush at Thiruvannamalai Temple Devotees Wait Up to 6 Hours for Darshan

வழக்கமாக விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்தவகையில், கிறிஸ்துமஸ் நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது திருவண்ணாமலையில் மார்கழி மாத மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் முதல் நாளில் மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று விடுமுறை நாளையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட் டம் அலைமோதியது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்களால் நெரிசல் அதிகம் காணப்பட்டது. வாகன நெரிசலும் கடுமையாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+