Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நள்ளிரவில் பகீர்! சென்னையில் சாதி ஆணவ படுகொலை! தங்கையை திருமணம் செய்தவரை வெட்டி கொன்ற அண்ணன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இளைஞர் ஒருவர் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணன் தினேஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணங்களை இந்தியாவில் இன்னுமே பெரும்பாலான பெற்றோர் ஏற்பதில்லை. காதல் திருமணங்களைச் செய்து கொள்ளும் ஜோடிகளை சாதி ஆணவ படுகொலை செய்யும் சம்பவங்களும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 Honor killing in Chennai Gang of four murders 26 year-old youth for marrying lover of another caste

அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது தலைநகர் சென்னையிலேயே நடந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் நடுரோட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை: சென்னை பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே நேற்றிரவு சுமார் 9 மணியளவில் நான்கு இளைஞர்கள் சேர்ந்த ஒருவரை திடீரென சரமாரியாக வெட்டி சென்றனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனையில் அந்த இளைஞரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபர் பள்ளிக்கரணை அம்பேத்கார் தெருவை சேர்ந்த பிரவீன் (26) என்ற இளைஞர் என்பது தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

Honor killing in Chennai Gang of four murders 26 year-old youth for marrying lover of another caste

என்ன காரணம்: அதாவது பிரவீன் ஜல்லடியன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருப்பினும் இந்த காதலுக்குப் பெண்ணின் வீட்டார் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெண்ணின் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் ஷார்மியை அழைத்துச் சென்று பிரவீன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் பிரவீன் மீது ஷர்மி வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

இந்தச் சூழலில் தான் ஷர்மியின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து பிரவீனை நேற்றிரவு படுகொலை செய்துள்ளார். பிரவீன் பள்ளிக்கரணை டாஸ்மார்க் கடை அருகே திட்டமிட்டபடி அவரை மடக்கி சரமாரி வெட்டி வெட்டி கொலை செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்கையைப் பெற்றோர்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் அண்ணன் தினேஷ் கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

தனிப்படை அமைப்பு: இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் தினேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக ஆணவப் படுகொலையில் ஈடுபட்ட தினேஷ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே அரங்கேறிய இந்த சாதி ஆணவ படுகொலை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+