ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதியா வரணுமா? இதுதான் பெஸ்ட் டிரிக்ஸ்!
சென்னை: கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பலரும் ஏசி ராத்திரி போட்டா, விடிய விடிய ஓடனும் என்பதே விருப்பமாக இருக்கிறது. அதேநேரம் கரென்ட் பில் குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். எனவே ஏசியை பயன்படுத்துபவர்கள் சில விஷயங்களை ஸ்மார்ட்டாக செய்வதன் மூலம் மின் கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் அதை இப்போது பார்ப்போம்.
இப்போது கோடைக்காலம் என்பதால் வெயில் வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது. சூரியனுக்கு பக்கத்தில் உள்ள கோளாக பார்க்கப்படும் வேலூராக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என தமிழகத்தின் எந்த ஊராக இருந்தாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது.
மக்கள் கோடைக்காலத்தில் வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்க ஏசி பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக இரவு முழுவதும் ஏசி போடுகிறார்கள்.இப்படி பயன்படுத்தும் போது மின் கட்டணம் அதிகம் ஆகிறது. அவர்கள் கீழ்கண்ட விஷயங்களை செய்தால் மின் கட்டணம் கணிசமாக குறையும்.
முதல் டிப்ஸ்: பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு இதுதான். வெயில் காலத்திற்கு முந்தைய குளிர் காலத்தில் ஏசியை சுத்தமாக உபயோகிக்காமல் விட்டுவார்கள். சும்மாவே ஏசி இருந்திருக்கும். அப்படி பயன்படுத்தாமல் இருக்கும் ஏசியை, கோடைக்காலம் துவங்கும் போது கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். அப்படி சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், மின் கட்டணம் அதிகமாக வந்துவிடும். ஏன் மின் கட்டணம் அதிகமாகும் என்றால், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைந்துவிடுகிறது. எனவே அந்த சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். எனவே தான் கரெண்ட் பில் அதிகமாக வருகிறது. எனவே முதலில் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள்.

இரண்டாவது விஷயம்: ஏசி பயன்படுத்தும் போது, டக்குன்னு 16 அல்லது 18 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிற்கு குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. இப்படி வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமித்துவிடலாம்ன்னு பயன்படுத்துனவங்க சொல்றாங்க.. பாத்துக்கங்க மக்களே..
மூன்றாவது விஷயம்: ஏசி ஆன் செய்ய போறீங்க...அப்படீன்னா, அதற்கு முன்னாடி, அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடிவிடுங்கள். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. கதவை மூடிவிட்டால் ஏசி அதிகமாக வேலை செய்வது குறையும். இதனால் மின் கட்டணமும் குறையும்,.

நான்காவது விஷயம்: ஏசி வாங்கும் போதே, அதிக ரேட்டிங் உள்ள ஏசிக்களை வாங்குங்கள். இந்த வகை ஏசிக்கள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்கும்.
ஐந்தாவது விஷயம்: நீங்கள் ஏசி போடும் மின்விசிறியைப் பயன்படுத்தினால், அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் ஏசி காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நல்ல ஏசி வாங்குவது எப்படி? இன்வர்டெர் வகை ஏசிக்கள் அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல், அறையைக் குளிரச் செய்யும். பொதுவாக ஒவ்வொரு ஏசிக்கும் ஒரு திறன் இருக்கும். அறையின் பரப்பளவைப் பொறுத்து 1 டன், 1.5 டன், 2 டன் என்றெல்லாம் ஏசிகள் இருக்கும். இன்வெர்ட்டர் ஏசிகளைப் பொறுத்தவரை சூழலைப் பொறுத்து கம்ப்ரஸரின் செயல்பாட்டை அவை கட்டுப்படுத்தும். இதன்மூலம் மின்சாரத்தின் தேவை பெரியஅளவில் குறையும். இதை ஆட்டோமெட்டிக்காகவே அவை மேற்கொள்ளும்.
உதாரணமாக, நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்திருந்தால், அறை வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் முதல் 1.5 டன் வரையில் அது சூழலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்யும். அதற்கேற்றபடி, இவை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்தும். இதன் மூலமாக மட்டும் 36 சதவீத மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும்.
அதேநேரம் 120 சதுர அடி பரப்பளவு கொண்ட உங்களின் பெட்ரூமுக்கு ஏசி வாங்கினால், அந்த அறையில் 3 மணி நேரத்துக்கு மேல் வெயில் படாது என்கிற சூழலில் இன்வெர்ட்டர் ஏசியை விட சாதாரண ஏசிதான் பெஸ்ட் என்கிறார்கள். அதேபோல், ஹால் அல்லது பெரிய அறைகள் போன்ற இடங்களில் இன்வெர்ட்டர் ஏசிதான் சரியாக இருக்கும் என்கிறார்கள். பொதுவாக பெரிய அறைகளில் சூரிய வெளிச்சம் அதிகம் படும் என்பதாலும், இடமும் கொஞ்சம் பெரிது என்பதால், மின்சார சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்தலாம்.
-
ஊரே கரெண்ட் இல்லை.. உங்களுக்கு ஏசி கவலையா.. வெங்கட் பிரபுவை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications