யோசனை.. தயக்கம்.. சம்மதம்! ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டது எப்படி?
சென்னை: ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் பல ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சந்தித்து பேசியிருப்பது தான் தமிழக அரசியலில் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது.
நமக்கென்று தனிக்கட்சி, தனி நிர்வாகிகள் இருக்கும் போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதால் நமக்கு என்ன பயன் எனக் கருதி, அவரை சந்திக்க முதலில் அதிகம் யோசித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா முன்னெடுத்த தீவிர முயற்சியின் காரணமாகவும், அமமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகளை எடப்பாடி டீம் வளைத்து வருவதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என தினகரனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் எடுத்துக் கூறியதாலும் இந்தச் சந்திப்புக்கு ஒரு வழியாக ஓகே சொல்லியிருக்கிறார்.
எங்கே வைத்து சந்திப்பது என்ற பேச்சு எழுந்த போது இருவருக்கும் பொதுவான பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் எதேச்சையாக நிகழ்ந்த சந்திப்பை போல் காட்ட ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்படியெல்லாம் முடியாது, வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம் தன்னைத் தேடி தனது வீட்டுக்கு வந்து சந்திக்கட்டும் என டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து அப்ஜெக்சன் ஏதும் தெரிவிக்காத ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை அவரது இல்லம் தேடிச் சென்று பல ஆண்டுகளுக்கு பிறகு சில நிமிடங்கள் மனம் விட்டு குமுறியிருக்கிறார்.

பண்றதை எல்லாம் பண்ணிட்டு பேச்சைப் பார் என்ற நடிகர் கவுண்டமணியின் வசனத்தை போல் ஓபிஎஸ்ஸிடம் ஒரு ரியாக்ஷன் கொடுத்த டிடிவி தினகரன், பழைய கசப்புகளை வெளிக்காட்டாமல் எடப்பாடி டீம் பற்றியும் அவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் பேசியிருக்கிறார்.
இதனிடையே சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில அஸ்திரங்களை கையில் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications