சென்னை உணவு திருவிழா.. இரவு முழுக்க போன "மெசேஜ்".. பீப் பிரியாணிக்கு அனுமதி கிடைத்தது எப்படி?
சென்னை: சிங்கார சென்னையின் உணவு திருவிழா 2022 சென்னையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடக்க கூடிய உணவு திருவிழா ஆகும் இது.
Recommended Video
நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். நேற்று நடைபெற்ற அரங்கில் பீப் பிரியாணி இந்த திருவிழாவில் இடம்பெறவில்லை.
இது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் பீப் பிரியாணிக்கு தற்போது உணவு திருவிழாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு பின் நடந்தது என்ன? இந்த அனுமதி கிடைத்தது எப்படி என்று பார்க்கலாம்.

சர்ச்சை
உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என்றதும் நெட்டிசன்கள் பலர் கோபம் அடைந்தனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது என்ன உத்தர பிரதேசமா? பீப் பிரியாணிக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது தவறு என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர். சில திமுகவை சேர்ந்த நிர்வாகிகளும், திமுக அனுதாபிகளும் கூட இது தொடர்பாக விமர்சனங்களை வைத்தனர். இது பெரிய சர்ச்சையானது.

பதில்
இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் அளித்த விளக்கத்தில் நாங்கள் பீப் பிரியாணியை தடை செய்யவில்லை. இங்கே நிறைய ஸ்டால்கள் உள்ளன. இதில் பீப் பிரியாணி வைக்க வேண்டும் என்று யாரும் விண்ணப்பம் கொடுக்கவில்லை. விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். மற்றபடி பீப் பிரியாணியை வேண்டும் என்றே தடை செய்யவில்லை என்று கூறினார். உணவுத்துறை அதிகாரிகளும் இதைத்தான் தெரிவித்தனர்.

எதிர்ப்பு
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத சிலர் கடுமையான விமர்சனங்களை அரசுக்கு எதிராக வைத்தனர். அங்கே 180 ஸ்டால் உள்ளது. ஒன்றில் கூடவா பீப் பிரியாணி இடம்பெறாது. இது என்ன கொடுமை. இதுதான் திராவிட ஆட்சியா? முன்பே ஆம்பூர் உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் அந்த திருவிழாவை தடையும் செய்தீர்கள். இது எப்படி நியாயம் ஆகும் என்று கேள்வி எழுப்பினர்.

விமர்சனம்
அதோடு இந்த விவகாரத்தை அமைச்சர்களுக்கு டேக் செய்து திமுகவினர் பலர் நேற்று இரவு முழுக்க சமூக வலைத்தளங்களில் மெசேஜ்களாக அனுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது பீப் பிரியாணியும் உணவு திருவிழாவில் இன்றும், நாளையும் இடம்பெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக மூன்று ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. இன்று முதல் அங்கு சுக்குபாய் நிறுவன பீப் உள்ளிட்ட பல்வேறு பீப் விற்பனை செய்யப்படும்.

அனுமதி காரணம்
ஆனால் இந்த அனுமதிக்கு பின் வேறு காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பீஸ் ஸ்டால் போட யாருமே அனுமதி கேட்கவில்லை. 180 ஸ்டால்களுக்கு முன்பே அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. பின்னர் நேற்று சர்ச்சைக்கு பின்பே சில நிறுவனங்கள் பீப் ஸ்டால் போட அனுமதி கேட்டனர். அதன்பின்பே அனுமதி கொடுக்கப்பட்டது. இதுதான் உண்மை. இதற்கு பின் வேறு அழுத்தங்கள் எதுவும் இல்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications