கரூர் சொகுசு பங்களா குறித்து கேட்ட அமலாக்கத் துறை.. செந்தில் பாலாஜி பரபர வாக்குமூலம்.. சிக்கிய தம்பி
சென்னை: கரூர் சொகுசு பங்களா குறித்து அமலாக்கத் துறை கேள்வி எழுப்பிய நிலையில் செந்தில் பாலாஜி அளித்த ஒரு வார்த்தையால் அவருடைய தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் அமலாக்கத் துறை கஸ்டடியில் இருந்த போது நடத்தப்பட்ட விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் 120 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

நேற்று முன் தினத்துடன் செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை காவல் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணையில் துன்புறுத்தல்கள் ஏதேனும் கொடுத்தார்களா என நீதிபதி கேட்ட போது அவர் இல்லை என்றார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டி வந்த சொகுசு பங்களாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். இந்த வீடு கரூர்- சேலம் புறவழிச் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ 30 கோடியாம். ஆனால் இதை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக அமலாக்கத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்று மாலை சென்னை அழைத்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.
மேலும் 4 முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகாத நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல நேரிடும் என்பதால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதன்படி கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.
அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பல கேள்விகளுக்கு அவர் தெரியாது, அப்படியா எனக்கு ஞாபகம் இல்லையே என தெரிவித்துள்ளார். அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் அமலாக்கத் துறையினர் அவர்களுடைய பாணியிலான விசாரணையை கையில் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கரூரில் வாங்கப்பட்ட நிலம் ரூ.30 கோடி. அதை ரூ.10 லட்சத்தில் அசோக்குமாரின் மாமியார் வாங்கியுள்ளார் என்றால் அதற்கு உங்கள் செல்வாக்கு பயன்படுத்தப்படாமல் இருந்திருக்காதே என அதிகாரிகள் கேட்டனர். அதற்கு செந்தில் பாலாஜி எல்லாமே அசோக்குமாருக்குத்தான் தெரியும். எனக்கு தெரியாது என்றார். செந்தில் பாலாஜியின் வாயிலாகவே அசோக்குமாரின் பெயர் வந்துவிட்டதால் அவரை தேடி கொண்டிருந்த நிலையில் போலீஸார் கைது செய்தனர்.
-
கண்ணீருடன் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி.. இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதித்தபோது உருக்கம் -
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications