கரூர் சொகுசு பங்களா குறித்து கேட்ட அமலாக்கத் துறை.. செந்தில் பாலாஜி பரபர வாக்குமூலம்.. சிக்கிய தம்பி
சென்னை: கரூர் சொகுசு பங்களா குறித்து அமலாக்கத் துறை கேள்வி எழுப்பிய நிலையில் செந்தில் பாலாஜி அளித்த ஒரு வார்த்தையால் அவருடைய தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் அமலாக்கத் துறை கஸ்டடியில் இருந்த போது நடத்தப்பட்ட விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் 120 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

நேற்று முன் தினத்துடன் செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை காவல் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணையில் துன்புறுத்தல்கள் ஏதேனும் கொடுத்தார்களா என நீதிபதி கேட்ட போது அவர் இல்லை என்றார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டி வந்த சொகுசு பங்களாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். இந்த வீடு கரூர்- சேலம் புறவழிச் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ 30 கோடியாம். ஆனால் இதை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக அமலாக்கத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்று மாலை சென்னை அழைத்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.
மேலும் 4 முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகாத நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல நேரிடும் என்பதால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதன்படி கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.
அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பல கேள்விகளுக்கு அவர் தெரியாது, அப்படியா எனக்கு ஞாபகம் இல்லையே என தெரிவித்துள்ளார். அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் அமலாக்கத் துறையினர் அவர்களுடைய பாணியிலான விசாரணையை கையில் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கரூரில் வாங்கப்பட்ட நிலம் ரூ.30 கோடி. அதை ரூ.10 லட்சத்தில் அசோக்குமாரின் மாமியார் வாங்கியுள்ளார் என்றால் அதற்கு உங்கள் செல்வாக்கு பயன்படுத்தப்படாமல் இருந்திருக்காதே என அதிகாரிகள் கேட்டனர். அதற்கு செந்தில் பாலாஜி எல்லாமே அசோக்குமாருக்குத்தான் தெரியும். எனக்கு தெரியாது என்றார். செந்தில் பாலாஜியின் வாயிலாகவே அசோக்குமாரின் பெயர் வந்துவிட்டதால் அவரை தேடி கொண்டிருந்த நிலையில் போலீஸார் கைது செய்தனர்.
-
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications