"அர்த்த ராத்திரி" அக்கிரமம்.. மண்ணெண்ணெய் வாங்க போன பொண்டாட்டிகள்.. கரெக்ட்டா வந்த காதலன்கள்.. அடடா
கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்
சென்னை: இலங்கையில் எரிபொருள் பிரச்சனை தலைதூக்கி வரும் நிலையில், குடும்ப ரீதியான மற்றும் சமூக பிரச்சனையும் வெடித்து கிளம்பி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது...
அதிலும் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் சொல்ல முடியாத அவதியில் உள்ளனர்.. எனவே, இலங்கையின் எரிபொருட்கள் தேவைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது...

மண்ணெண்ணெய்
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்யை வாங்கி கொள்வதற்காக, அம்மக்கள் கால்கடுக்க பல நாட்கள் நிற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.. இதற்காக இரவு, பகல் என்றும் பாராமல், நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கிறார்கள்... அப்படி பெட்ரோல் வாங்க சென்றபோதுதான், ஒரு முக்கிய சம்பவம் ஒன்று சிலாபம் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெயை வாங்குவதற்காக, நைட் நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்..

ஷாக்
நீண்ட வரிசை இருந்ததால், அந்த பெண்ணும் வரிசையில் போய் நின்று கொண்டார்.. ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த பெண்ணை காணோம்.. கள்ளக்காதலனுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்.. இந்த விஷயம் தெரிந்து அந்த கணவன் கொந்தளித்தார்.. மனைவியை இழுத்துக் கொண்டு ஓடிய அந்த இளைஞரை விரட்டி பிடித்து தாக்கினார்.. இதில், அந்த இளைஞர் படுகாயமடைந்தார்.அதேபோல, இன்னொரு இடத்திலும், இதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது..

ரெஸ்ட்
பெட்ரோல் வாங்குவதற்காக, ஒருவர் வரிசையில் காத்து கொண்டிருந்தார்.. அப்போது அவர் மனைவி அங்கு வந்துள்ளார்.. "ரொம்ப நேரமாக வரிசையில் நிற்கிறீங்களே, வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. உங்களுக்கு பதில் நான் வரிசையில் நிற்கிறேன்" என்று தந்திரமாக பேசியுள்ளார்.. உடனே அவரது கணவரும், மனைவி சொன்னதை நம்பி வீட்டுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து, வீட்டுக்குச் சென்ற கணவன், மறுபடியும் மனைவியை தேடி வந்தார்.. ஆனால், வரிசையில் மனைவியை காணவில்லை..

களேபரம்
தேடி தேடி பார்த்தபோதுதான், பெட்ரோல் வாங்க வந்த இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து கொந்தளித்து போய்விட்டார்.. அங்கேயே, அப்போதே அந்த இளைஞரையும், மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.. இந்த களேபரத்தில், கடைசிவரை இவர்கள் பெட்ரோலும் வாங்கவில்லை.. மண்ணெண்ணெயும் வாங்கவில்லை.. போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றுள்ளது.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. ஏற்கனவே இப்படித்தான் ஒரு பெண், கள்ளக்காலனுடன் இரவு நேரத்தில் ஓட்டம் பிடித்தாராம்.. இப்படி 3 சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது.

நள்ளிரவு
அதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனையானது, சமூக ரீதியான பிரச்சினையாக மாறி கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது..! இந்நிலையில், இலங்கையில் 2 வார காலத்துக்கு சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி என அத்தியாவசியப் பணிகளுக்குதான் பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படும் என்றும், தனியார் வாகனங்கள் எதற்கும் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தடையானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது... அதனால், ஒட்டுமொத்த இலங்கையே முடங்கி காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications