Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்த்தையை விட்டு.. எடப்பாடி இப்படி சொதப்பிட்டாரே.. எதையோ சீண்ட போய்.. எங்கேயோ மாட்டிக்கிட்டாராமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம் ஒன்று தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில்.. அவர் வைத்த விமர்சனம் அவருக்கு எதிராக மாறி இருக்கிறது.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை செய்கின்றன. அதே சமயம் தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.

How Edappadi Palanisamy statement actually went against himself in bus strike?

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எடப்பாடி விமர்சனம்: இந்த போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும், இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்துள்ளார்.

எதிராக மாறிவிட்டது: ஆனால் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம் தற்போது அவருக்கே எதிராகவே திரும்பி உள்ளது. அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில்.. அவர் வைத்த விமர்சனம் அவருக்கு எதிராக மாறி இருக்கிறது.

அதன்படி 96 மாசம், அதாவது 8 வருஷம், இதுல கிட்டத்தட்ட 6 வருஷம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான்.. அவர்கள் ஆட்சியில கொடுக்கப்படாத டிஏ மற்றும் வருமான பாக்கிக்கு அவர்களே நியாயம் கேப்பது கொடுமையிலும் கொடுமை என்று நெட்டிசன்கள், திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

அமைச்சர் விமர்சனம்: அமைச்சர் சிவசங்கர் வைத்துள்ள விமர்சனத்தில், அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது. அதைதான் இப்போது கேட்கிறார்கள். அப்படி இருக்க எடப்பாடி இதில் கருத்து சொல்லலாமா என்று கேட்டுள்ளார்.

96 மாதம் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது தற்போது அவருக்கே எதிராக மாறி இருக்கிறது.;

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+