Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2,689 கோடி செலவில் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் இடையே 6 வழிச்சாலை.. எப்படி அமைகிறது.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் வருகின்றன.இந்த வாகனங்களால் சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் இடையே 6 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாலை குறித்து பார்ப்போம்.

சென்னையில் எல்லா சாலையிலுமே நெரிசல் அதிகம் என்றாலும், வட சென்னை பகுதிகளில் கனரக வாகனங்களில் ஏற்படும் நெரிசலும், அதனால் மக்கள் படும் அவதியையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஏராளமான கண்டெய்னர் லாரிகள் துறைமுகம் செல்கின்றன.

How is the 6-lane highway between Thiruvallur - Sriperumbudu at a cost of Rs 2 689 crore

இதுதவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திராவில்இருந்தும் ஏராளமான கண்டெய்னர் லாரிகள் வந்த வண்ணம் உள்ளன. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வாகனங்கள் துறைமுகம் செல்கின்றன. இப்படி வரும் வாகனங்களால் நெரிசல் அதிகமாக இருக்கிறது.

மாமல்லபுரம் நெம்மேலியில் 1500 மீ நீள ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியது எப்படி? ஆடிப்போன அதிகாரிகள்
எல்லைச்சாலை திட்டம்

சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் சாலையில் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையிலும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 132.87 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட இருக்கிறது.

திருவள்ளூர் புறவழிச்சாலை

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 132.87 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலையின் ஒரு பகுதியாக திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 30.10 கிலோ மீட்டர் நீளத்துக்கு 6 வழிச்சாலை மற்றும் இருவழி சர்வீஸ் சாலை (இருபுறமும்) அமைக்கப்பட உள்ளது.

ஆறுவழிச்சாலை

இதில் திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து வெங்காத்தூர் வரை 10.4 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.1,133.20 கோடியிலும், வெங்காத்தூர் முதல் செங்காடு வரை 10 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.593.27 கோடி செலவிலும், செங்காடு முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 9.70 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.963.27 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 30.10 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.2 ஆயிரத்து 689 கோடியே 74 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள், ஒரு ரெயில்வே மேம்பாலம் மற்றும் 2 பெரிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+