ஒரு பாம்பு எத்தனை முறை மனிதர்களை தீண்டும்? விடாத கட்டுவிரியன்! ஆக்ரோஷ கண்ணாடி விரியன்! எது மோசம்?
சென்னை: ஒரு பாம்பு எத்தனை முறை மனிதர்களை தீண்ட முடியும் என்பது தெரியுமா? அது போல் நல்லப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் பாம்புகளில் எதில் விஷத்தன்மை அதிகம் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு பாம்பால் எத்தனை முறை மனிதர்களை தீண்ட முடியும்? அப்படி தீண்டிய பின்பு நஞ்சு திரும்பச் சுரப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்? - என என்னிடம் பலர் கேட்டுள்ளனர். அதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

நச்சுப்பைகள்: நஞ்சுள்ள பாம்புக்கு இரு நச்சுப்பைகள், அதன் வாயின் உட்புறம் மேல் தாடையில் கண்களுக்கு பின்னால் அமைந்துள்ளன. இதிலிருந்து மேல் தாடையில் இருபக்கமும் உள்ள இரு நச்சுப் பற்கள் நச்சு நாளங்கள் மூலம் இணைந்து உள்ளன.
பாம்பு நஞ்சு என்பது புரோட்டீன் மற்றும் பல்வேறு விதமான என்சைம்களின் கலவையாகும். பாம்பு தீண்டும் போது அதன் நச்சுப் பற்களின் வழியாக நஞ்சை இரைகளின் மீது உட்செலுத்தி அவற்றை செயலிழக்க செய்கின்றன.
இவ்வாறு நஞ்சை செலுத்தி இரையை செயலிழக்கச் செய்வது பிடிக்கப்படும் இரை எதிர்த்தாக்குதல் செய்ய இயலாமல் அதனை செயலிழக்கச் செய்வதற்கே!
பின்னர் இரை விழுங்கப்படும் போது இந்த நஞ்சு இரையை விரைவில் செரிக்கச் செய்கிறது. இரையின் அளவைப் பொறுத்து பாம்பு இரையை கொல்லத் தேவையான அளவு மட்டுமே நஞ்சை செலுத்துகின்றன!
முழு இரை: பொதுவாக அவை முழு இரை எடுத்த பின்னர் ஒருமாதம் வரையிலும் கூட அடுத்த இரை எடுக்காமலிருக்கும் !. பாம்புகள் தனது இரையையோ மனிதர்களையோ தீண்டும்பொழுது செலுத்தப்படும் நஞ்சின் அளவு அதன் நச்சுப் பையில் தேங்கி உள்ள நஞ்சின் அளவில் மிகவும் சிறிதளவே.

எனவே ஒரு நஞ்சுள்ள பாம்பு ஒருநாளில் பலமுறை அடுத்தடுத்து தீண்டினாலும் நஞ்சைச் செலுத்த இயலும்!
கண்ணாடி விரியன் பாம்பு ஒருவரை மிக ஆக்ரோஷத்துடன் தீண்டி , தீண்டிய இடத்திற்கு அருகில் 2 அங்குலம் தள்ளி மீண்டும் அப்போதே தீண்டியதை நான் அறிவேன். இவை நல்லப் பாம்பு, கட்டுவிரியன் ஆகியனவற்றை விட மிக அதிகமான நஞ்சைச் செலுத்துகின்றன!
கட்டுவிரியன் பாம்புகள் சில தீண்டல்களின் போது தீண்டியதும் தீண்டிய இடத்தை விடாது பற்றி மீண்டும் மீண்டும் தனது வாயை மென்று(Chew) அதிகப்படியான நஞ்சை தொடர்ந்து செலுத்துகின்றன.
விடாது கவ்வும்: இவ்வாறு மறுமுறையும் தீண்டுவது அல்லது தீண்டிய இடத்தை விடாது கவ்விப் பற்றி தொடர்ந்து அதிக நஞ்சை செலுத்துவது ஆகியன பெரும்பாலும் பாம்பை தெரியாமல் மிதித்திருந்த போதே நிகழ்கின்றன.
மேலும் மனிதர்கள் மீது நஞ்சுள்ள பாம்பின் தீண்டல்களில் சுமார் 25% அளவு தீண்டல்கள் நஞ்சு செலுத்தப்படாத உலர் தீண்டலாக (Dry Bites) அமைகின்றன. இது அச்சுறுத்தி நம்மை அகலச் செய்வதற்காகவே என கருதப்படுகிறது!
கோடை மற்றும் மழைக் காலங்களில் பாம்புகள் அதிக அளவிலும் வீரியம் மிக்க நஞ்சை உற்பத்தி செய்கின்றன.எனவே இக்காலங்களில் பாம்புத் தீண்டல் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளன.
நஞ்சு சேகரிக்க: பாம்பு பண்ணைகளில் பாம்பு நஞ்சு சேகரிக்க (Milking of Venom) பாம்பின் வாயைத் திறந்து அதன் நச்சுப் பற்களை ஒரு கோப்பையின் மேல் கட்டப்பட்ட ரப்பர் ஷீட் மீது வைத்து அழுத்தி இந்த நஞ்சு கோப்பையில் சேகரிக்கப்படும்.
இதேபோல் அடுத்த 15-வது நாள் மீண்டும் அதே பாம்பிடமிருந்து நஞ்சு எடுப்பார்கள். சேகரிக்கப்படும் நஞ்சில் 10% அளவு எதிர்வினை நஞ்சு (Anti Venom) தயாரிக்கவும், 90% நஞ்சு பல்வேறு மருந்துப் பொருட்கள் தயாரிப்பிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறன.
15 நாட்களில் மீண்டும் நஞ்சு: எனவே நஞ்சு எடுத்த 15 நாட்களில் நஞ்சு முழு அளவில் சுரந்து அதன் நஞ்சுப் பை மீண்டும் நிரம்பிவிடும் என் கருதலாம்! வளர்ந்த பாம்புகள் அதன் நஞ்சுப் பையிலிருந்து சுமார் 45 % வரையிலான நஞ்சை முதலாவது தீண்டலின்போதே வெளியேற்ற இயலும். இருப்பினும் செலுத்தும் நஞ்சின் அளவை வளர்ந்த பாம்புகள் கட்டுப்படுத்த இயலும். இரையை செயலிழக்கச் செய்ய தேவையான அளவு நஞ்சை மட்டுமே தீண்டலின்போது செலுத்துகின்றன!
9 பேர் பலி: தென் ஆப்ரிக்காவில் இரவில் வீட்டிற்குள் நுழைந்த ஒரு பிளாக் மாம்பா எனும் கொடிய நஞ்சுள்ள பாம்பு அந்த இரவில் வீட்டில் ஒன்பது நபர்களை அடுத்தடுத்து தீண்டி அவர்கள் அனைவருமே இறந்தனர் என முன்னர் ஒருமுறை நேஷனல் ஜியோகிராபி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்தனர்! இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications