Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகசுதாவை 2வது திருமணம் செய்த நடிகர் ரஞ்சித்! மீண்டும் வந்தபோது பிரியா ராமன் என்ன செய்தார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பிரியா ராமன் தனது வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களை பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு இரு குழந்தைகளுக்கும் பக்கபலமாக இருந்து வருகிறார். நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம் செய்து விட்டு தன்னிடம் வந்த போது பிரியா ராமன் செய்தது என்ன?

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ப்ரியா ராமன் "சூர்யவம்சம்" படத்தில் முதலில் திமிராக வருவார். அவருக்கு சரத்குமார் வாழ்க்கையை பிச்சையாக போட்டிருப்பார். கணவனின் தொழில் வீழ்ந்தவுடன் சரத்குமாரை தேடிவந்து உதவி கேட்பார்.

television ranjith

அது திரையில். ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. கணவர் விட்டுச் சென்றாலும் தன் வாழ்க்கையை தன் குழந்தைகளுக்காக வடிவமைத்துக் கொண்டார். பாரதிராஜா டில்லியைச் சேர்ந்த ப்ரியாராமனை தன் படத்து நாயகியாக்க தீர்மானித்திருந்தார்.

அவரது புகைப்படம் ரஜினியின் கைக்குப்போக ரஜினியின் 'வள்ளி'யாக மாறினார். எந்த நடிகைக்கும் வாய்க்காத வாய்ப்பு. சூப்பர் ஸ்டார் எழுதிய கதைக்கு, சூப்பர் ஸ்டார் அறிமுகப்படுத்த, அவருடனே நடித்த பாக்யம். அதுவும் டைட்டில் ரோலில்.

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு. ஐ.வி.சசி அறிமுகப்படுத்தியது 'சைன்யம்' படத்தில். விமானியாக. சுரேஷ் கோபியுடன் காஷ்மீரம் படத்தில் ஆக்ரா கோட்டைகளில் அவர் ஆடும் ஆட்டம் 90 கால மலையாளிகள் மறக்காதது. ஃபாஸில் படத்தில் மம்முட்டியுடன். மோகன்லாலின் ஆறாம் தம்புரான் படத்தில் ப்ரியாராமனின் பெயர் 'நயன்தாரா'.

அதோடு அவரின் மற்றொரு பாக்யம் கே.விஸ்வநாத் இயக்க, எஸ்.பி.பாலசுப்ரமண்யம்-கமல் தயாரிக்க கமலுடனே நடித்தது. படம் சுபசங்கல்பம். தமிழில் 'பாசவலை'. சித்ரா லக்ஷ்மணன் தயாரித்து, இயக்க, கார்த்திக்குடன் 'சின்னராஜா'. நல்ல நல்ல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது 'நேசம் புதுசு' படத்தில் ரஞ்சித்துடன் ஜோடி. ஷுட்டிங் இடைவேளையில் உண்டான பழக்கம் திருமணத்தில் முடிந்தது.

இரண்டு ஆண் குழந்தைகள். பதினைந்து வருட திருமண பந்தம் முறிந்த போது ப்ரியா கவலைப்படவில்லை. இரண்டு மகன்களோடு தன் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டார். சீரியல் அவருக்கு கை கொடுத்தது. சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார். கடந்த கால கசப்புகளை சீரியஸாகவே எடுக்கவில்லை.

ரஞ்சித் நடிகை ராகசுதாவை மணந்த போதும் அவர் கவலைப்படவில்லை. அவர் வாழ்க்கையை பார்த்த விதமே வேறு என்பது பின்னொரு நாளில் தெரிந்தது. ஆம்... ஆடி, ஓடி, ஓய்ந்து ரஞ்சித் அவரைத் தேடி வந்த போது ப்ரியா ராமன் ஒதுக்கவில்லை. விவாகரத்தான மனிதரெனவும் நினைக்கவில்லை. வள்ளி படத்தில் திரும்பி, திருந்தி வரும் நாயகனை வள்ளி கொல்வாள்.

வாழ்க்கைப்பிச்சை வாங்கியது என்பதெல்லாம் சூர்யவம்சம் படத்தின் கௌரி தான். இப்போ இருப்பது வள்ளியுமல்ல. கௌரியுமல்ல. இப்போ நாங்களே போடுவோம் வாழ்க்கைப் பிச்சை... அது தான் ப்ரியா ராமன்....இங்கே சாதியுமில்லை... சம்பிரதாயமுமில்லை...ஜெயித்தது அன்பு மட்டுமே..... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+