ராகசுதாவை 2வது திருமணம் செய்த நடிகர் ரஞ்சித்! மீண்டும் வந்தபோது பிரியா ராமன் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: நடிகை பிரியா ராமன் தனது வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களை பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு இரு குழந்தைகளுக்கும் பக்கபலமாக இருந்து வருகிறார். நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம் செய்து விட்டு தன்னிடம் வந்த போது பிரியா ராமன் செய்தது என்ன?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ப்ரியா ராமன் "சூர்யவம்சம்" படத்தில் முதலில் திமிராக வருவார். அவருக்கு சரத்குமார் வாழ்க்கையை பிச்சையாக போட்டிருப்பார். கணவனின் தொழில் வீழ்ந்தவுடன் சரத்குமாரை தேடிவந்து உதவி கேட்பார்.

அது திரையில். ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. கணவர் விட்டுச் சென்றாலும் தன் வாழ்க்கையை தன் குழந்தைகளுக்காக வடிவமைத்துக் கொண்டார். பாரதிராஜா டில்லியைச் சேர்ந்த ப்ரியாராமனை தன் படத்து நாயகியாக்க தீர்மானித்திருந்தார்.
அவரது புகைப்படம் ரஜினியின் கைக்குப்போக ரஜினியின் 'வள்ளி'யாக மாறினார். எந்த நடிகைக்கும் வாய்க்காத வாய்ப்பு. சூப்பர் ஸ்டார் எழுதிய கதைக்கு, சூப்பர் ஸ்டார் அறிமுகப்படுத்த, அவருடனே நடித்த பாக்யம். அதுவும் டைட்டில் ரோலில்.
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு. ஐ.வி.சசி அறிமுகப்படுத்தியது 'சைன்யம்' படத்தில். விமானியாக. சுரேஷ் கோபியுடன் காஷ்மீரம் படத்தில் ஆக்ரா கோட்டைகளில் அவர் ஆடும் ஆட்டம் 90 கால மலையாளிகள் மறக்காதது. ஃபாஸில் படத்தில் மம்முட்டியுடன். மோகன்லாலின் ஆறாம் தம்புரான் படத்தில் ப்ரியாராமனின் பெயர் 'நயன்தாரா'.
அதோடு அவரின் மற்றொரு பாக்யம் கே.விஸ்வநாத் இயக்க, எஸ்.பி.பாலசுப்ரமண்யம்-கமல் தயாரிக்க கமலுடனே நடித்தது. படம் சுபசங்கல்பம். தமிழில் 'பாசவலை'. சித்ரா லக்ஷ்மணன் தயாரித்து, இயக்க, கார்த்திக்குடன் 'சின்னராஜா'. நல்ல நல்ல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது 'நேசம் புதுசு' படத்தில் ரஞ்சித்துடன் ஜோடி. ஷுட்டிங் இடைவேளையில் உண்டான பழக்கம் திருமணத்தில் முடிந்தது.
இரண்டு ஆண் குழந்தைகள். பதினைந்து வருட திருமண பந்தம் முறிந்த போது ப்ரியா கவலைப்படவில்லை. இரண்டு மகன்களோடு தன் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டார். சீரியல் அவருக்கு கை கொடுத்தது. சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார். கடந்த கால கசப்புகளை சீரியஸாகவே எடுக்கவில்லை.
ரஞ்சித் நடிகை ராகசுதாவை மணந்த போதும் அவர் கவலைப்படவில்லை. அவர் வாழ்க்கையை பார்த்த விதமே வேறு என்பது பின்னொரு நாளில் தெரிந்தது. ஆம்... ஆடி, ஓடி, ஓய்ந்து ரஞ்சித் அவரைத் தேடி வந்த போது ப்ரியா ராமன் ஒதுக்கவில்லை. விவாகரத்தான மனிதரெனவும் நினைக்கவில்லை. வள்ளி படத்தில் திரும்பி, திருந்தி வரும் நாயகனை வள்ளி கொல்வாள்.
வாழ்க்கைப்பிச்சை வாங்கியது என்பதெல்லாம் சூர்யவம்சம் படத்தின் கௌரி தான். இப்போ இருப்பது வள்ளியுமல்ல. கௌரியுமல்ல. இப்போ நாங்களே போடுவோம் வாழ்க்கைப் பிச்சை... அது தான் ப்ரியா ராமன்....இங்கே சாதியுமில்லை... சம்பிரதாயமுமில்லை...ஜெயித்தது அன்பு மட்டுமே..... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications