வருமான வரி விலக்கு வரம்பு உயர்வால் அரசுக்கு லாபம்? இதென்ன கணக்கு? நிதி வல்லுநர்கள் சொல்லும் மேட்டர்!
சென்னை: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

12 லட்சம் வரை வரி விலக்கு
கடந்த 2019-ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023-ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசுக்கு இழப்பா?
அதேசமயம், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதன் காரணமாக மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த இழப்பு, அரசுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள் நிதி வல்லுநர்கள். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால், மிச்சமாகும் பணத்தை மக்கள் தாராளமாக செலவு செய்வார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துவிடும்.
பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?
மாதத்துக்கு 1 லட்சம் வரை சம்பாதிக்கும் மாதச் சம்பளதாரர்கள் அதிகபட்சமாக ஓராண்டில் ரூ.60,000 வரை சேமிக்க முடியும். ஒருவருக்கு ரூ.10,000 வரை வரி சேமிக்க முடியும் என்றால் அவர் நிச்சயமாக ரூ.8,000 வரை செலவு செய்வார். இதன்மூலம் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துவிடும்.
மேலும், இந்த வரி விலக்கு காரணமாக, மக்கள் செலவழிப்பதும் கூடும். வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்களில் அவர்களின் செலவுகள் இருக்கக்கூடும். அவற்றிற்கான வரிகள் அதிகம் என்பதால், அவை மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துவிடும், எனவே, அரசுக்கு இந்த வரி விலக்கால் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
நிதி அமைச்சர் நிர்மலா சொன்னது
இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பேசியுள்ளார். வரி விலக்கு முன்பு ரூ.2.2 லட்சமாக இருந்தது, பின்னர் 2014-ல் ரூ.2.5 லட்சமாக மாறியது. 2019-ல் ரூ.5 லட்சமாகவும், பின்னர் ரூ.7 லட்சமாகவும், தற்போது ரூ.12 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
அதன் மூலம், ஒருவர் மாதம் சராசரியாக ரூ.1 லட்சம் சம்பாதித்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என அரசு கருதுகிறது. வருமான வரி அடுக்குகளை மறுசீரமைப்பதன் மூலம், சேமிக்கப்படும் பணம், நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவை மீண்டும் பொருளாதாரத்தில் சுழற்சியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
பாக்கெட்டில் அதிக பணம்
இப்போது ரூ. 8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவரின் பாக்கெட்டில் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் அதிகமாக உள்ளது. 2014ல் ஒருவர் 8 லட்சம் சம்பாதித்திருந்தால் வரி ரூ.1 லட்சம்; இப்போது, பூஜ்ஜியம். ரூ. 12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர், 2014ல், ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும், ஆனால் இப்போது ஒரு ரூபாய் கூட செலுத்தத் தேவையில்லை. எனவே அவர்களின் பாக்கெட்டில் ரூ.2 லட்சம் அதிகம் இருக்கும். இதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூர்தர்ஷனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications