தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி.. பின்னணி என்ன?
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தூய்மை பணியாளருக்கு மற்றொரு தொழிலாளியிடமிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
நோய் கட்டுப்பாட்டு பகுதியான ராயபுரத்தில் துப்புரவு பணியை 58 வயது நபர் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி பணியாளர் ஆவார். இவர் ஏழுகிணறு பகுதியில் கொண்டிதோப்பை சேர்ந்தவர்.
இவருக்கு நேற்று முன் தினம் முதல் அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுத்திணறல்
இவர் நேற்று இரவு வரை எந்த வித பாதிப்பும் இல்லாமல் உடல்நிலையும் சீராக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.

விசாரணை
அவர் 10 ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. வேறு ஒரு துப்புரவு பணியாளரிடம் இருந்து இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

துப்புரவு தொழிலாளி
கொரோனாவுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது முதல் முறையாக தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லேசான காய்ச்சல் காரணமாக ஒரு துப்புரவு தொழிலாளி இறந்தார், ஆனால் அவருக்கு கொரோனா இல்லை.

கருஞ்சிகப்பு மண்டலம்
சென்னையில் ராயபுரத்தில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகியன கருஞ்சிகப்பு மண்டலமானது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications