தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி.. பின்னணி என்ன?
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தூய்மை பணியாளருக்கு மற்றொரு தொழிலாளியிடமிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
நோய் கட்டுப்பாட்டு பகுதியான ராயபுரத்தில் துப்புரவு பணியை 58 வயது நபர் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி பணியாளர் ஆவார். இவர் ஏழுகிணறு பகுதியில் கொண்டிதோப்பை சேர்ந்தவர்.
இவருக்கு நேற்று முன் தினம் முதல் அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுத்திணறல்
இவர் நேற்று இரவு வரை எந்த வித பாதிப்பும் இல்லாமல் உடல்நிலையும் சீராக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.

விசாரணை
அவர் 10 ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. வேறு ஒரு துப்புரவு பணியாளரிடம் இருந்து இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

துப்புரவு தொழிலாளி
கொரோனாவுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது முதல் முறையாக தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லேசான காய்ச்சல் காரணமாக ஒரு துப்புரவு தொழிலாளி இறந்தார், ஆனால் அவருக்கு கொரோனா இல்லை.

கருஞ்சிகப்பு மண்டலம்
சென்னையில் ராயபுரத்தில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகியன கருஞ்சிகப்பு மண்டலமானது.












Click it and Unblock the Notifications