இந்த ஆண்டு தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறுவது எப்படி? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தட்கல் திட்டத்தின் கீழ், விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான, விண்ணப்பங்களை பெறும் பணியை மின்வாரியம் தொடங்கி இருக்கிறது.
மின்சார வாரியம் ஏழை விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இலவச மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் இது அவ்வளவு எளிதானது அல்ல. சீனியாரிட்டி அடிப்படையில் பல ஆண்டுகள் காத்திருந்து பெற வேண்டும். அதேநேரம் தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம். இதற்கு லட்சங்களில் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பம் பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டம் (தட்கல்) ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தட்கல் திட்டத்தின்கீழ், விவசாய மின்இணைப்புக்கு விண்ணப்பங்களை மின்சார வாரியம் பெற்று வருகிறது.
இத்திட்டத்தில் 5 குதிரைத் திறன் வரையிலான இணைப்பு பெற ரூ.2.50 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும். 5 முதல் 7.50குதிரைத் திறன் வரை ரூ.2.75 லட்சம் செலுத்த வேண்டும். 10 குதிரைத் திறன் வரை ரூ. 3 லட்சமும், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், இணைப்புபெற மின்வாரியத்தின் இணையதளத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்த விவசாயிகள் தட்கல் திட்டத்துக்கு மாற விரும்பினால் செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடிதம் பெற வேண்டும். முழு கட்டணம் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் அலுவலகத்தில் விருப்ப கடிதம் மற்றும் உரிய வருவாய் ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் விருப்ப மனு அளிப்பதற்கு முன்பே பெயர் மாற்றம், புல எண் மாற்றம் மற்றும் தேவைப்படின் தடையில்லா சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தட்கல் திட்டத்தில் மின் பளு மாற்றத்திற்கு அனுமதி இல்லை. மேலும் இந்தத் திட்டத்தில் 15 எச்.பி. வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம் பெறுவதற்கான வழிமுறை என்ன? ஒவ்வொரு ஆண்டும், எவ்வளவு பேருக்கு இலவச மின்சாரம் வழங்கலாம் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்கிறது. அதற்குத் தகுந்தவாறு, விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தேவைப்--படும் சான்றுகளுடன், சம்பந்தப்பட்ட பகுதியின் மின்வாரிய செயற்-பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கு, பதிவுக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்தினால், பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்-பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்குவார்கள்.
எப்படி மின் இணைப்பு கிடைக்கும்: பதிவு மூப்பு அடிப்படையில், இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் அனைத்துச் சமூகத்தினரும் விண்ணப்பிக்கலாம். இதுதான் இலவச மின்சாரம் பெறுவதற்கான பொதுவான வழிமுறை. அதேநேரம் இலவச மின் இணைப்பு பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications