‛அதிரடி’.. மயிலாப்பூர் பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு ‛சீல்’.. அறநிலையத்துறை ஆக்ஷன்.. பரபரக்கும் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூர் பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை இன்று சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்திலும் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.

HRCE deparment officials sealed BJP election office at Mylapore in Chennai

இதனால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு திடீரென்று அறநிலையத்துறையில் சீல் வைத்துள்ளனர்.

அதாவது சென்னை மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான கட்டடம் வணிக பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களில் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தான் வணிக பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட கட்டடத்தில் பாஜக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது விதிமீறலாகும். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பாஜக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+