"சக்ஸஸ்".. சாதித்த வைகோ.. மதிமுக தலைமைக்கழக செயலாளரானார் துரை வையாபுரி.. இனிதான் பிரச்சனையே
மதிமுக பொதுக்குழு கூட்டம் வைகோ தலைமையில் இன்று கூடுகிறது
சென்னை: உட்கட்சி பூசல், அதிருப்திகள், சலசலப்புகளுக்கு மத்தியில் மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூடிய நிலையில், மதிமுக தலைமைக்கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
துரை வைகோவுக்கு மிக முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்ப்புகளும் வலுவாகி உள்ளன.
அன்று திமுகவில் கருணாநிதியிடம் வாரிசு அரசியலை எதிர்த்துதான், கட்சியைவிட்டு வெளியே வந்தார் வைகோ.. இப்போது அதே வாரிசு அரசியலை மதிமுகவிலும் உருவாக்குகிறாரே என்பதே பலரது வாதமாக உள்ளது.

துரை வைகோ
ஏற்கனவே மதிமுக மாவட்ட செயலாளர்கள் 4 பேர் போர்க்கொடி தூக்கிய நிலையில், பல்வேறு மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் மதிமுகவுக்கு எதிரான மனநிலைமையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று மதிமுக பொதுக்குழு கூடியது.. இந்த பொதுக்குழுவில்தான், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்க வைகோ யோசித்து வருவதாகவும், அதற்கேற்ற வகையில் கட்சி சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

துரை வையாபுரி
கட்சியின் மா.செ.க்கள் மதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரிடமும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், இதை வைகோ எப்படி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.. ஒருவேளை அதிருப்திக்குள்ளாகி இருக்கும் மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிப்பார்களா? அல்லது அதிருப்தியாளர்களையும் கூட்டத்தில் பங்கேற்க வைத்து அவர்களை சரிகட்ட வைகோ முயற்சிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

அதிருப்தியாளர்கள்
ஆனால், அதிருப்தியாளர்களுக்கும் இன்றைய பொதுக்குழு கூட்டத்துக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக துரை வைகோ நேற்று தெரிவித்திருந்தார். எனவே, இன்று நடக்க போகும் கூட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியபடியே இருந்தது. துரை வைகோவுக்கு எதிராக செயல்படும் மூத்த மாவட்ட செயலர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட அதிருப்தி நிர்வாகிகள் இன்று கூடும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்படுவர் என்றும் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெடித்து வந்தன.

வைகோ தலைமை
இன்று காலையில், மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில், சென்னை அண்ணாநகரில் கூடியது. பொதுக்குழு கூட்டம் கூடியது.. துணை பொதுச் செயலர்களாக ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், தலைமை நிலைய செயலராக துரை வைகோ, தணிக்கை குழு உறுப்பினராக சுப்பையா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

போட்டியின்றி தேர்வு
உள்ளனர். துரைக்கு ஆதரவாளர்களாக உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மட்டும் பொதுக்குழுவில் பேச அனுமதிக்கப்பட உள்ளனர்... மதிமுக தலைமைக்கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது... மேலும், மதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், எதிர்பார்த்தபடியே மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.. இதனால் இவர்கள் மீது கட்சி நடவடிக்கை பாயுமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications