கர்நாடக இசையை ஜனநாயகப்படுத்திய டி.எம் கிருஷ்ணாவை எதிர்ப்பதா? ரஞ்சனி காயத்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: இசை கலைஞர் கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரியின் முடிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு பலரும் விமர்சனம் வைத்துள்ளனர்.
கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விமர்சனம்: கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரியின் இந்த முடிவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு எதிராக, அவரின் அரசியலை காரணம் காட்டி இப்படி கருத்து தெரிவிப்பது தவறானது என்று விமர்சனங்களை வைத்துள்ளனர்.
மியூசிக் அகாடமி தலைவர் முரளி, இது விளம்பரத்திற்காக செய்யப்பட்ட எதிர்ப்பு, ரஞ்சனி காயத்ரி இந்த விருதை அவமானப்படுத்த வேண்டும் என்று, தேவையில்லாத பிரச்னையை உருவாக்க வேண்டும் என்று இந்த முடிவை ரஞ்சனி காயத்ரி எடுத்துள்ளனர், என்று ரஞ்சனி காயத்ரி மீது கடுமையான பதில் விமர்சனங்களை வைத்துள்ளார்.
விசிக துணை பொதுச்செயலாளர் டி எம் கிருஷ்ணா செய்துள்ள விமர்சனத்தில், கர்நாடக இசை துறையில் உயரிய விருதாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது பெறும் இசை கலைஞர் திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துகள்.
திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், பல கர்நாடக இசை கலைஞர்கள் இவ்வருட மியூசிக் அகாடமி நிகழ்வை புறக்கணிப்பதாகவும், ஏற்கனவே இவ்விருதை பெற்ற வீணை கலைஞர் ஒருவர் அதை திருப்பி அளிப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட பார்ப்பன பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள கர்நாடக இசை கலையை அனைவருக்குமானதாக சனநாயகப்படுத்தும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றும் துணை நிற்போம், என்று விமர்சனம் செய்துள்ளார்.
டி எம் கிருஷ்ணா சாதனை: கர்நாடக இசை ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்பதை மாற்றி அதை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறார் கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா. பெசன்ட் நகரில் மீனவர்கள் குடியிருப்பில் இசை நிகழ்ச்சி நடத்துவது, மீனவர்களையும் சேர்த்துக்கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துவது என்று கர்நாடக இசையை மக்களிடம் கொண்டு செல்வதற்கான தீவிரமான பணிகளை கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா மேற்கொண்டு வருகிறார்.
"பாரம்பரிய" கர்நாடக இசை கலைஞர்கள் பலர் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அது எப்படி அது எப்படி "அங்கே" எல்லாம் இசை கச்சேரி நடத்தலாம் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர் இசையை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறு இல்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அந்த இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை. இந்த நிகழ்வை புறக்கணிக்கிறோம்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஆம் ஆண்டு மியூசிக் அகாடமியின் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்தும், டிசம்பர் 25 அன்று எங்கள் கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுவதாக நாங்கள் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
டி எம் கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். வேண்டுமென்றே மகிழ்ச்சியுடன் உள்ள சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார்.
அவரது செயல்கள் ஒரு கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதில் அவமான உணர்வைப் பரப்ப முயன்றது மற்றும் இசையில் ஆன்மீகத்தை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தார். அவர் மில்லியன் கணக்கான கர்நாடக இசை கலைஞர்களை கொச்சைப்படுத்தி உள்ளார். கலைத்திறன், கடின உழைப்பு மற்றும் கர்நாடக இசையை அவமதித்து உள்ளார்.
இசையை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறு இல்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications