சுற்றுலா போன பெண்ணை நைனிடால் காட்டுக்குள் விடிய விடிய துரத்திய டாக்ஸி டிரைவர்! ஜிபிஎஸ் காட்டிய உண்மை
சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தின் மலைப்பாதையில் சுற்றுலா சென்றுள்ளார் டெல்லியை சேர்ந்த 31 வயது பெண்.. அங்குதான் இந்த கொடுமை சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸி டிரைவரின் பாலியல் அத்துமீறலில் இருந்து தப்பிக்க, அந்தப் பெண் இரவு முழுவதும் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
டெல்லியில் இருந்து சுற்றுலா வந்த அந்தப் பெண், கடந்த மார்ச் 5ம் தேதி நைனிடாலுக்கு செல்வதற்காக திட்டமிட்டிருந்தார். நள்ளிரவு 11 மணி அளவில் காத்கோடாமில் இருந்து நைனிடால் செல்வதற்காக ஒரு வாடகை காரை பிடித்தார்.

வாடகை கார் சுற்றுலா
அந்த டாக்ஸியை ஹல்த்வானியைச் சேர்ந்த தீபக் சிங் போரா (39) என்பவர் ஓட்டிச் சென்றார். மறுநாள் மார்ச் 6ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில், கார் நைனிடாலுக்கு இன்னும் 10 கி.மீ தொலைவில் உள்ள பல்டியாக்கான் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது டாக்ஸி டிரைவர் தீபக் சிங், திடீரென பிரதான சாலையிலிருந்து விலகி, ஆள் நடமாட்டமில்லாத பட்வா டங்கர் என்ற காட்டு பகுதிக்கு காரைத் திருப்பியுள்ளார்... ரூட் மாறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், டிரைவரிடம் உடனடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நைனிடால் அடர்ந்த காடு
இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், காரை நிறுத்திவிட்டு அந்த பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், பெண்ணிடமிருந்த செல்போனையும் பிடுங்கிக்கொண்ட அவர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.. இந்த இக்கட்டான சூழலில், எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று அந்த பெண் நினைத்தார்..
இதற்காக துணிச்சலுடன் ஓடும் காரில் இருந்து குதித்து அருகிலிருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஓடியுள்ளார்... கீழே விழுந்ததில் உடம்பெல்லாம் காயமடைந்துள்ளது.. செல்போனும் கையில் இல்லாததால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் அந்தப் பெண் தவித்துள்ளார்.. ஆனால், காம வெறி பிடித்த அந்த டிரைவர் விடாமல் பெண்ணை துரத்தி கொண்டே ஓடிவந்தார்..
சுற்றுலா பெண்ணுக்கு பாலியல் தொல்லை
எனினும், அவரிடம் சிக்காமல் இருக்க அந்தப் பெண் இரவு, அங்கிருந்த ஒரு முட்செடிகளுக்கு நடுவில் பதுங்கி கொண்டார்.. இரவு முழுவதும் அடர்ந்த காட்டில் அந்த முட்செடிகளுக்கு இடையே விடிய விடிய பதுங்கியிருந்தார்.. பிறகு எப்படியோ சிரமப்பட்டு பட்வா டங்கர் கிராமத்தை அந்தப் பெண் சென்றடைந்தார். அங்கிருந்த உள்ளூர் பெண்கள் அவரை மீட்டு, தாலிட்டல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் நைனிடால் எஸ்எஸ்பி மஞ்சுநாத் டிசி தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் குற்றவாளியைத் தேடினார்கள்..
விடிய விடிய பயங்கரம்
தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த தீபக் சிங் போராவை போவாலி பகுதியில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து பெண்ணின் செல்போன் மீட்கப்பட்டதுடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது...!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications