எப்ப பார்த்தாலும் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு.. கொன்னுட்டேன்..!
மனைவியை கொன்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "எப்ப பார்த்தாலும் ஓட்டல் சாப்பாடுதான் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. என் அம்மாவை கெட்ட கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டினாள், அதான் கழுத்தை நெறித்து கொன்று, தொங்கவிட்டு விட்டேன்" என்று கணவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை கிண்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் ஒரு கார் டிரைவர். இவரது மனைவி இலக்கியா.. 24 வயதாகிறது.. கிண்டியில் உள்ள ஒரு மாலில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், கடந்த 30-ந் தேதி நடுராத்திரி இலக்கியா, வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினரும் இலக்கியாவை மீட்டு அருகில் இருந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இலக்கியா
இதையடுத்து, கிண்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது. இதனிடையே இலக்கியாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது. அதில் இலக்கியாவின் மரணம் தற்கொலை இல்லை என்றும், அவரது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அதற்கு பிறகுதான் சடலத்தை தூக்கில் தொங்கவிடப்பட்டுதாகவும் தெரியவந்தது.

கழுத்து நெறித்து கொலை
கிண்டி போலீசார், உடனடியாக கணவர் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மனைவியை தான்தான் கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். மேலும் அவர் போலீசில் சொன்னதாவது: "நாங்க ரெண்டு பேருமே வேலைக்கு போய்விடுவோம்.

கெட்ட வார்த்தைகள்
இதனால் வீட்டில் சமைக்கிறதே இல்லை.. எப்பவுமே ஓட்டல் சாப்பாடுதான். தினமும் ஹோட்டலில்தான் சாப்பாடு வேண்டும் என்று இலக்கியா கேட்பாள். அது எனக்கு கட்டுப்படியாகல.. அதனால் சமையல் செய்ய, எங்கள் சொந்த ஊர் திருவண்ணாமலையில் இருந்து என் அம்மாவை வரவழைத்து கொள்ளலாம் என்று சொன்னேன். அதற்கு இலக்கியா ஒத்து கொள்ளவில்லை.

கைது
மேலும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் என் அம்மாவை திட்டினாள். அது தாங்க முடியாமல்தான், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு.. பிறகு சடலத்தை தூக்கில் தொங்கிவிட்டேன்" என்றார். இதையடுத்து கணவர் ஜெயராஜ் கைது செய்யப்பட்டதுடன், இலக்கியாவின் இந்த தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications