துண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை
மனைவியை தீ வைத்து எரிக்க முயன்ற கணவன் கைது செய்யப்பட்டார்
சென்னை: ராஜனுக்கு இவ்வளவு ஆவேசம் ஆகாது.. மனைவி பஞ்சவர்ணம் மீது மண்ணெண்ணெயை ஊற்றி, சிகரெட் நெருப்பால் பற்ற வைத்து உயிரோடு கொளுத்தி விட்டார்.
சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரில் வசித்து வந்தவர் ராஜன்.. இவருக்கு துண்டு பீடி ராஜன் என்று பட்ட பெயர் உண்டு. மனைவி பெயர் பஞ்சவர்ணம்.. வயது 38 ஆகிறது!

கல்யாணம் ஆனதில் இருந்த இவர்களுக்குள் சண்டையாம்.. இது அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தெரிந்த ஒன்றுதான்!
சம்பவத்தன்றும் தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் முற்றியுள்ளது... அப்போது ராஜன் ரொம்பவே ஆக்ரோஷம் ஆகிவிட்டார்.. அதனால் கிச்சனில் இருந்து மண்ணெண்ணெயை எடுத்து வந்து பஞ்சவர்ணம் மீது ஊற்றிவிட்டு, சிகரெட் நெருப்பினால் பற்ற வைத்துள்ளார்.
பஞ்சவர்ணம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு கொண்டு போய், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 45சதவீதம் தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட பஞ்சவர்ணத்துக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது.
மேஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் அளித்த வாக்குமூலத்தில், கணவன்தான் ஆத்திரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு, சிகரெட்டால் தீ வைத்து கொளுத்தியதாக சொன்னார். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர் ராஜனை.. ஸாரி துண்டு பீடி ராஜனை!












Click it and Unblock the Notifications