மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை.. நான் பேசியதை திரித்து விட்டார்கள்.. ஆளுநர் ரவி பரபரப்பு விளக்கம்
சென்னை: மகாத்மா காந்தியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவமதித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு ஆளுநர் விளக்கம் அளித்துள்ளர். மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை எனவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கிறேன் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்ட விழா கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம்.

கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை. நமக்கு தெரியாமல் நிறைய தியாகிகள் உள்ளனர்.
அவர்களை பற்றி அறிய நாம் முயற்சிப்பது கிடையாது. மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில், பிரிவினைவாத முயற்சியும் நடந்தது. இந்தியர்கள் அப்போது பிரிந்திருந்தனர். இந்திய தேசிய காங்கிரசால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க இயலாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணமாக மட்டுமே இருந்தது.
1947- ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணமாகும்" என்று பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர் என் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் தான் தனது பேச்சுக்கு ஆளுநர் ஆர் என் ரவி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. காந்தியை நான் மதிக்கிறேன். அவருடைய போதனைகள் எனது வாழ்வில் பயனுள்ளதாக இருந்தன. காந்தியை அவமதித்துவிட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
நேதாஜி பிறந்த நாள் விழாவில் நான் பேசியதை ஊடகங்கள் சில திரித்து வெளியிட்டன. நாட்டின் சுதந்திரத்திற்கு நேதாஜி அளித்த பங்களிப்புக்கு உரிய வகையில் அவர் பாராட்டப்படவில்லை என்றே நான் கூறினேன்" என்று கூறியுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications