Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவர் கொலைக்கு நீதி.. திருவிகநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சபதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திரு.வி.க நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். கணவரின் கொலைக்கு நீதி வாங்கவே தேர்தலில் போட்டி என்று பொற்கொடி கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட சென்னை மக்களிடம் கடும் கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி கேட்டு அவரின் மனைவி பொற்கொடி போரா வருகிறார். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

i-need-justice-for-my-husband-murder-said-thiru-vi-ka-nagar-admk-alliance-candidate-porkodi-amstrong

கணவர் கொலைக்கு நீதி

இதுகுறித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெய்பீம். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கினார்கள். திருவிகநகர் தொகுதியை உறுதிபடுத்தியுள்ளனர். அங்கு நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிசாமி ஐயா என்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சட்டசபையிலும் தொடர்ந்து இதைப்பற்றி பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். நான் இங்கு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும். என்னுடைய கணவரின் கொடூர கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றார்.

எப்படி எதிர்கொள்ளும் திமுக

வடசென்னையில் செல்வாக்குமிக்க ஆம்ஸ்ட்ராங் மனைவி திருவிகநகர் தொகுதியில் அவரின் மனைவி பொற்கொடி போட்டியிடுவது திமுகவுக்கு கடுமையான போட்டியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு திமுகவினர் பலத்த வியூகங்களுடன் தேர்தல் பணியாற்றி வெற்றி பெற முயற்சி செய்வார்கள். இதனால் திருவிகநகர் தொகுதி தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+