Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டு போடச்சொன்னபோது போடல.. ரம்மி பற்றி கூறினால் மட்டும் விளையாடுவாங்களா? கடுப்பான சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரத்தில் நடித்தது பற்றிய கேள்விக்கு, ‛‛ஓட்டுப்போட சொன்னபோது மக்கள் ஓட்டுபோடவில்லை. பணத்துக்கு காசு வாங்காதீங்க என சொன்னபோது கேட்கவில்லை. இப்போது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததால் தான் மட்டும் விளையாட போறாங்களா?'' என பதலளித்து நடிகர் சரத்குமார் கடுப்பை வெளிப்படுத்தினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த உண்ணாவிரதத்துக்கு மத்தியில் சரத்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ஆன்லைன் விளம்பரத்தில் நடித்தது பற்றி அவர் பல்வேறு விஷயங்களை கூறினார். இதுபற்றி நடிகர் சரத்குமார் கூறியதாவது:

ரம்மி அறிவுப்பூர்வமானது

ரம்மி அறிவுப்பூர்வமானது

ரம்மியை அனைவராலும் இஸியாக விளையாட முடியாது. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடித்தால் நான் இதனை சொல்லவில்லை. ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது. ஆன்லைன் ரம்மி போன்று இணையதளத்தில் ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. நாம் அனைவரும் வேண்டாம் என்று நினைத்தால் இந்த விளையாட்டுக்குள் யாரும் உள்ளே போகமாட்டார்கள்.

நான் சொன்னால் கேட்டுவிடுவார்களா?

நான் சொன்னால் கேட்டுவிடுவார்களா?

நான் யாரையும் கெடுக்கவில்லை. நான் சொல்வதால் அனைவரும் கேட்டு விடுவார்களா என்ன?. ஓட்டு போடுங்கள் என கூறினேன். ஓட்டு போடவில்லையே. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என கூறியபோதும் கேட்கவில்லையே. இதையெல்லாம் கேட்காத நிலையில் நான் ரம்மி விளையாடுங்கள் என கூறினால் மட்டும் கேட்டு விடுவார்களா?.

சட்ட அமைச்சரிடம் கோரிக்கை

சட்ட அமைச்சரிடம் கோரிக்கை

இருப்பினும் கூட தமிழ்நாட்டில் விரைவில் சட்டம் இயற்றுங்கள் என சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நானே கூறியிருக்கிறேன். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு இப்போது தான் சட்டம் இயற்றி உள்ளனர். நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே விளம்பரத்தில் நடித்துவிட்டேன். இங்கு சரத்குமார் நடித்தது மட்டும் தான் தவறாக தெரிகிறது. மற்றவர்கள் நடித்தது எதுவும் தவறாக தெரியவில்லை.'' என்றார்.

ரஜினி பாவம்

ரஜினி பாவம்

மேலும் ‛‛ஒன்றை யாரும் திணிக்க முடியாது. விளம்பரத்தில் சிகரெட் வந்தாலும் எனது தந்தை, நான் சிகரெட் பிடிப்பது இல்லை. ஒருவரின் வாயில் கட்டாயமாக சிகரெட்டையோ, மதுபானத்தையோ வைக்க முடியாது. அதுபோல் தான் ஆன்லைன் விளையாட்டும்'' என்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ரஜினிகாந்த சிகரெட் பிடித்ததால் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்சி பெரிய போராட்டம் நடத்தியது. இப்போது ரஜினிகாந்த் சிகரெட்டை நிறுத்திவிட்டார்'' எனக்கூறி ஒரு கேள்வியை கேட்க முயன்றார். அப்போது சட்டென குறுக்கிட்ட சரத் குமார், ‛‛ரஜினிகாந்தை ஏன் இழுக்கிறீர்கள். அவர் பாவம். நேற்று தான் அவருக்கு பிறந்தநாள்'' எனக்கூறினார்.

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் சிலர் பணத்தை இழந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரத்தில் நடித்தது பற்றிய கேள்விக்கு, ‛‛ஓட்டுப்போட சொன்னபோது மக்கள் ஓட்டுபோடவில்லை. பணத்துக்கு காசு வாங்காதீங்க என சொன்னபோது கேட்கவில்லை. இப்போது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததால் தான் மட்டும் விளையாட போறாங்களா?'' என பதலளித்து நடிகர் சரத்குமார் கடுப்பை வெளிப்படுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+