புகைப்பட கலைஞனாக வேண்டுமென ஆசைப்பட்டேன்.. காலம் அரசியல்வாதியாக மாற்றிவிட்டது.. உதயநிதி ஸ்டாலின்!
புகைப்படம் கலைஞராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை: கல்லூரி காலங்களில் புகைப்பட கலைஞராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் காலம் என்னை அரசியல்வாதியாக மாற்றியதாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக இருப்பதாக கூறினார்.
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் காலத்தால் கரையாத காட்சிகள் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள லலித்கலா அகாடமியில் பிப்.10ம் தேதி தொடங்கியது.
ஒரு வாரம் நடைபெற்ற இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புகைப்பட கலைஞர்கள் சங்கம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சங்கத்தில் பல்வேறு பத்திரிக்கைகளை சேர்ந்த, புகைப்படக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

புகைப்பட கண்காட்சி
இந்த கண்காட்சியில் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த முக்கியமான செய்திகளின் புகைப்பட தொகுப்பும் இக்கண்காட்சியில் இடம்பெறும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்து புகைப்படங்களை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் புகைப்பட கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி, நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று பேசுகையில், அனைவரும் அமர்ந்து பேசுமாறு வலியுறுத்தினர். அப்போது, சிலருக்கு உட்கார்ந்தால் பேச்சு வரும். சிலருக்கு நின்றால் பேச்சு வரும். அதனால் நான் நின்று கொண்டே பேசுகிறேன் என நகைச்சுவை பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், அழையா விருந்தாளியாக வந்துள்ளேன். ஒரு மணி நேரம் புகைப்படங்களை பார்த்தேன்.

புகைப்பட கலைஞர்கள்
எந்த விழாவிற்கு வருகை தந்தால் ஏதாவது சொல்ல மாட்டானா? கண்டெண்ட் கிடைக்காதா? என செய்தியாளர்கள் மைக்குடன் ஆவலாக வருவார்கள். பேசாமல் போயிருவோம். ஆனால் புகைப்பட கலைஞர்களிடம் இருந்து தப்ப முடியாது. இந்த கண்காட்சியில் அனைத்து புகைப்படங்களும் சிறப்பாக இருந்தது.

உதயநிதி ஸ்டாலினின் ஆசை
புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக உள்ளன. நானும் புகைப்பட கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் காலம் என்னை அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டது. தமிழ்நாட்டின் அனைத்து போராட்டங்களின் சாட்சியும் இந்த கண்காட்சியில் புகைப்படங்களாக இடம்பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அரசியல் தலைவர்களின் பங்களிப்புகள் என பல புகைப்படங்கள் கவர்ந்தது என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications