ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்குமாம்.. சொல்வது லதா ரஜினிகாந்த்!
ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது என லதா ரஜினி கூறியுள்ளார்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியல் பிரவேசம் என்பது 20 வருஷத்துக்கு மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். இன்னும் இதற்கு முழுசா விடையே காணோம். ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து... எதிர்பார்த்து.. ஏங்கி... தவித்தே போய்விட்டார்கள்!

ஆனால் இத்தனை வருடங்களில் ரஜினி அரசியல் குறித்தும், வருங்கால திட்டங்கள் குறித்தும் லதா ரஜினிகாந்த் பகிரங்கமாக எந்தவித கருத்தையும் சொன்னதில்லை.
தற்போது ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பகிரங்கமாக கருத்து கூறியுள்ளார்.
அதில் "உங்களது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று பதிலளித்துள்ளார்.
சினிமாவில் ரஜினிக்கு பக்கபலமாக இருப்பதை போலவே, அவரது அரசியல் வாழ்விலும் உறுதுணையாக இருப்பீர்களா? என்ற கேள்விக்கு, "ஆன்மிக பாதை, அரசியல் பாதை எதுவானாலும் சரி, அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி... அதற்குநான் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்" என்று லதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications