ஓகே சொன்ன ஆளுநர் ரவி! TNPSC புதிய தலைவராக எஸ்.கே. பிரபாகர் நியமனம்! அப்போ சைலேந்திர பாபு?
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.கே.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டது. எஸ்.கே. பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய பதவிக்காலம் 2028 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆகும். 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரபாகர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் எஸ்.கே.பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் விஏஓ முதல் வட்டாட்சியர் வரை அனைத்து விதமான பணிகளுக்கும் தேர்வு செய்யப்படுகிறார்கள். குரூப் 1, குரூப் 2 , குரூப் 4, விஏஓ, குரூப் 3 என தொடங்கி குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தமிழகத்தில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு, முதல் கட்ட தேர்வு, பிரதான தேர்வு என அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தேர்வு எழுத வேண்டும். சில பதவிகளுக்கு நேர்காணலே இல்லாமலும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளை கவனிக்க ஐஏஎஸ் அதிகாரி டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இந்த டிஎன்பிஎஸ்சி ஆணையமானது ஒரு தலைவரையும் 13 உறுப்பினர்களையும் கொண்டது. இதில் தலைவர் பதவி நிரப்பப்படாமல் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த டிஎன்பிஎஸ்சியின் தலைவராக 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பாலச்சந்திரனின் பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து பொறுப்பு தலைவராக முனியநாதன் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications