என்னை பாஜக சுட்டுக் கொல்லும்...2024 தேர்தலில் வெற்றி பெற்றால் இதுதான் கதி- திருமாவளவன் பகீர் பேச்சு
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நான் சுட்டுக் கொல்லப்படலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நிருபர்கள் சங்கத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் வழக்கின் தீர்ப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பேசியதாவது: இன்று நமக்கு தலை நிமிர்வையும் தன்மானத்தையும் எது பெற்றுத் தந்தது என்றால் சமூக நீதி என்ற கோட்பாடுதான் பெற்றுத் தந்தது. ஜனநாயகம் என்ற கோட்பாடு தந்தது.

ஆர்.எஸ்.எஸ்.
சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றை ஒரு கோட்பாடாக தந்திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அப்படியானால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் உண்மையான எதிரியார்? என்பதை இப்போது சொல்லுங்கள். காங்கிரஸா? கிடையாது. கம்யூனிஸ்டுகளா? கிடையாது. தத்துவார்த்த ரீதியாக முரண்பாடுகள் உண்டு. அவ்வளவுதான். திமுகவா? கிடையாது.

ஒரே எதிரி அரசியல் சட்டம்
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முழுமையான எதிரி, உண்மையான எதிரி, முதன்மையான எதிரி, ஒரே எதிரி, ஒற்றை எதிரி, இந்திய அரசமைப்புச் சட்டம்தான். அதை தூக்கி எறியவேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். இந்து ராஷ்டிரம் என இந்த நாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் சூட்டுவதற்கு தடையாக இருப்பது அரசியல் சாசனம்தான். அரசாங்கத்தின் மதம் என ஒன்றை தடையாக இருப்பது அரசியல் சட்டம்.
சமூக நீதியை தந்து பெண்களை மேம்பாடு அடைய செய்வது, தலித்துகளை மேம்பாடு அடைய செய்வது, விளிம்புநிலை மக்களை அதிகார வரம்புள்ளவர்களாக வளர்த்தெடுப்பது என்பது எல்லாம் அரசியல் சட்டம்தான். அதுதான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கும் சிக்கலாக இருக்கிறது.

அடுத்தடுத்து படுகொலைகள்
ஆகையால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை நோக்கி இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் அரசியல் சட்டத்தை மீறுகிறீர்களா? என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் கவுரி லங்கேஷை வீடு தேடிப் போய் படுகொலை செய்தனர். அவர் எந்த கட்சியும் கிடையாது. பேராசிரியர் கல்புர்கியை வீடு தேடிப் போய் கொல்கிறார்கள். தபேல்கரை கொல்கிறார்கள். இவர்கள் என்ன அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களா?

என்னை சுட்டுக் கொல்வார்கள்
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சாசனம் ஒரு இரவில் செல்லாது என அறிவிக்கப்பட்டுவிடும். மனுஸ்மிருதிதான் இந்த நாட்டின் சட்டம் என்பார்கள். அப்போது யார் யார் எந்தெந்த சிறைகளில் இருப்பார்களோ தெரியாது . இந்த திருமாவளாவன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications