திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள்... சொல்கிறது அதிமுக
சென்னை: திமுக ஆட்சியை பிடித்தால் பல முதலமைச்சர்கள் இருப்பார்கள் என்று பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஸ்டாலின்,உதயநிதி, கனிமொழி,தயாநிதி மாறன் என்று பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள் என முதல்வர் ஈ.பி.எஸ் சாடினார். தனது பிரசாரத்தின்போது அவர் குற்றம் சாட்டுகையில், தி.மு.கவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்களே குட்டி ராஜ்ஜியங்கள் நடத்தி வந்தனர். அமைச்சர்களை விட அதிகாரம் படைத்தர்களாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் வலம் வந்தனர். இதை மிஞ்சிடும் வகையில் தற்போது திமுகவில் குட்டி ராஜாக்கள் வலம் வருகின்றனர். ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களே இந்த குட்டி ராஜாக்களாக திமுகவை ஆக்கிரமித்துள்ளனர் என முதல்வர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ஒரு புறம் கருணாநிதியின் வாரிசுகள் திமுகவை ஆக்கிரமித்துள்ள நிலையில் மறுபுறம் திமுகவின் மூளையாக செயல்பட்ட முரசொலி மாறனின் வாரிசு தயாநிதி மாறன், கட்சி என்ற குடும்ப சொத்தில் எனக்கும் பங்கு உள்ளது என்று அவரும் ஒரு ராஜியத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படி ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களே கட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகின்றனர். திமுக ஆட்சியை பிடித்தால் இந்த குட்டி ராஜாக்கள் குட்டி முதலமைச்சர்களாக வலம் வருவார்கள் என்பது நிதர்சனம். சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும் நிலையில் ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்துவிட்டு இந்த குட்டி ராஜாக்களில் ஒருவர் கட்சியை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
RECOMMENDED STORIES