“டைம் மெஷின் கிடைத்தால் 2014க்கு போய் பிரதமர் மோடியை மாற்றி விடுவேன்” - நடிகர் கிஷோர் பதில் வைரல்
சென்னை: "டைம் மெஷின் கிடைத்தால் 2014 ஆம் ஆண்டுக்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றி விடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகும்" என நடிகர் கிஷோர் கூறிய பதில் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என திரைத்துறையில் முக்கிய நடிகராக இருப்பவர் கிஷோர். பொல்லாதவன் திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர் கிஷோர். ஆடுகளம், ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, விடுதலை உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

ஹரிதாஸ் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தொடர்ந்து, விசாரணை, வடசென்னை என வெற்றி மாறன் திரைப்படங்கள் உள்பட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது, இவர் நடிப்பில் உருவான மெல்லிசை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றின் போது, டைம் மெஷின் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள்? என நடிகர் கிஷோரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கிஷோர், "அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் 2014-க்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறி இருக்கும். இப்போது ஆபத்தான நிலைமையில் நாடு இருக்கிறது. நம் நாடு மட்டுமல்ல, பல நாடுகள் அப்படிதான் இருக்கின்றன. இன்று ட்ரம்பையே எடுத்துக் கொள்ளுங்களேன். இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடும்.
வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இப்போது, நாட்டில் வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இப்படியே சென்றால், இதனை மாற்ற பல ஆண்டுகள் ஆகும். அன்பு இல்லையென்றால் இங்கு எதுவும் இருக்காது" என பதிலளித்துள்ளார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சிக்கலில் இருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் குறித்து சிலர் ஒரு கடமைக்காக ட்வீட் போட்டிருக்கிறார்கள் என்றும் திரைத்துறையில் இருந்து வலுவான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்களே என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "அரசியல் என்பது அதிகார பதவி போல் ஆகிவிட்டது. ஆனால் அது அதிகார பதவி கிடையாது. மக்களுக்காக வேலை செய்கிற ஒரு சேவகன். முன்னாள் பிரதமர் நேருவும் இதைதான் சொல்லி இருக்கிறார். அதாவது நான் தான் முதன்மை சேவகன் என்று சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி நான் தான் பிரதம சேவகன் என்று சொல்கிறார். தற்போது ஜனநாயகம் தவறாக வழிநடத்தப்படுகிறது. வெறுப்புணர்வுகள் அதிகமாகி விட்டன" எனத் தெரிவித்துள்ளார். கிஷோரின் இந்த பதில்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
-
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications