“டைம் மெஷின் கிடைத்தால் 2014க்கு போய் பிரதமர் மோடியை மாற்றி விடுவேன்” - நடிகர் கிஷோர் பதில் வைரல்
சென்னை: "டைம் மெஷின் கிடைத்தால் 2014 ஆம் ஆண்டுக்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றி விடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகும்" என நடிகர் கிஷோர் கூறிய பதில் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என திரைத்துறையில் முக்கிய நடிகராக இருப்பவர் கிஷோர். பொல்லாதவன் திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர் கிஷோர். ஆடுகளம், ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, விடுதலை உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

ஹரிதாஸ் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தொடர்ந்து, விசாரணை, வடசென்னை என வெற்றி மாறன் திரைப்படங்கள் உள்பட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது, இவர் நடிப்பில் உருவான மெல்லிசை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றின் போது, டைம் மெஷின் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள்? என நடிகர் கிஷோரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கிஷோர், "அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் 2014-க்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறி இருக்கும். இப்போது ஆபத்தான நிலைமையில் நாடு இருக்கிறது. நம் நாடு மட்டுமல்ல, பல நாடுகள் அப்படிதான் இருக்கின்றன. இன்று ட்ரம்பையே எடுத்துக் கொள்ளுங்களேன். இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடும்.
வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இப்போது, நாட்டில் வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இப்படியே சென்றால், இதனை மாற்ற பல ஆண்டுகள் ஆகும். அன்பு இல்லையென்றால் இங்கு எதுவும் இருக்காது" என பதிலளித்துள்ளார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சிக்கலில் இருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் குறித்து சிலர் ஒரு கடமைக்காக ட்வீட் போட்டிருக்கிறார்கள் என்றும் திரைத்துறையில் இருந்து வலுவான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்களே என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "அரசியல் என்பது அதிகார பதவி போல் ஆகிவிட்டது. ஆனால் அது அதிகார பதவி கிடையாது. மக்களுக்காக வேலை செய்கிற ஒரு சேவகன். முன்னாள் பிரதமர் நேருவும் இதைதான் சொல்லி இருக்கிறார். அதாவது நான் தான் முதன்மை சேவகன் என்று சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி நான் தான் பிரதம சேவகன் என்று சொல்கிறார். தற்போது ஜனநாயகம் தவறாக வழிநடத்தப்படுகிறது. வெறுப்புணர்வுகள் அதிகமாகி விட்டன" எனத் தெரிவித்துள்ளார். கிஷோரின் இந்த பதில்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications