ஆக்கிரமிப்புக்கு உதாரணமே கோவைதான்.. பெயரை சொன்னால் நாளையே அரசியலாகிவிடும்.. பிடிஆர் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வனத்துறை ஆக்கிரமிப்பிற்கு உதாரணமே கோவைதான், அந்த உதாரணம் பற்றி பேசினால் நாளையே அது அரசியலாகிவிடும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை கூடியதில் இருந்தே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. காலையிலேயே அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறி சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு அரசு தற்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்றுதான் இந்த வழக்கில் தொடர்புடைய சயனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இன்று சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.

போராட்டம்

போராட்டம்

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொடநாடு கொலை வழக்கு குறித்து பேசினார். சட்டப்படியே விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. நாங்கள் தேர்தலின் போதே இது தொடர்பாக வாக்குறுதி கொடுத்து இருந்தோம். அதைத்தான் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 உதயநிதி

உதயநிதி

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டும் என்று பேசினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பட்ஜெட் உரை குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். அதோடு தமிழ்நாட்டில் வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்தும் பேசினார்.

Recommended Video

    Vanathi VS PTR | PTR-ஐ கிண்டல் செய்த வானதி | TamilNadu Budget 2021 | Oneindia Tamil
    கோயம்புத்தூர்

    கோயம்புத்தூர்

    பிடிஆர் தனது பேச்சில், தமிழ்நாட்டில் வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. வனத்துறை கோயம்புத்தூரில் ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய உதாரணம் உள்ளது. அனைத்து மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு நடக்கிறது. என்றாலும் கோவைதான் ஆக்கிரமிப்பில் பெரிய உதாரணமாக நிற்கிறது. அந்த உதாரணம் பற்றி நான் பேசினால் அரசியல் ஆகிவிடும்.

    அரசியல்

    அரசியல்

    அந்த பெயரை சொன்னால் நாளையே அது பெரிய அரசியலாகிவிடும். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை நில ஆக்கிரமிப்பு நிலங்கள் வேகமாக மீட்கப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+