Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் வரும்.. குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். இதில் 95 கோடி பேர் ஸ்மார்ட் போன் வைத்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு செல்போனில் மோசடி மற்றும் வணிக நோக்கில் தவறான அழைப்புகள் அதிகமாக வருகிறது. இதனால் ஏற்படும் மோசடியை தடுக்க நடவடிக்கையாக தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும் வகையில் புதிய வசதியை தொலை தொடர்பு அமைச்சகம் கொண்டுவரப்போகிறது.

இந்தியாவில் செல்போன் எண் இல்லாமல் வங்கி கணக்கை ஓபன் செய்ய முடியாத நிலை இருக்கிறது. நகைக்கடன் பெறவும் ஓடிபி அவசியம் என்கிற அளவிற்கு மாறிவிட்டது. செல்போன் இல்லாவிட்டால் ரேஷன் கார்டு வாங்க முடியாது. ஆதார் வாங்க முடியாது. அரசின் உதவி தொகைகள் எதுவும் வாங்க முடியாது. அரசின் சேவைகளை பெறவும் முடியாது. வீட்டில் குறைந்த பட்சம் ஒருவருக்காவது செல்போன் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அரசின் சேவைகள் மற்றும் கட்டாயம் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கும். அந்த அளவிற்கு செல்போன் அவசியமாகி விட்டது.

cell phone sim card

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு

இதன் காரணமாக இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இணையதளத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

மோசடி நடக்கிறது

இதனால் மோசடி வலையில் சிக்கி பலர் பணத்தை பறிகொடுக்கிறார்கள். முன்பு ஆதார் கார்டு மற்றும் ஓடிபி கேட்டு மோசடி செய்தார்கள். அடுத்தாக மின்சார பில் பெயரில் மோசடி செய்தார்கள். அதற்கு அடுத்து கேஒய்சி பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஏமாற்றி பணத்தை பறித்தார்கள். பார்ட் டைம் வேலை, அரசு வேலை, கவர்ச்சிகமாரன தள்ளுபடிகள் என பல்வேறு லிங்குகுளை அனுப்பி மோசடி செய்தார்கள். எல்லாவற்றையும் கண்டுபிடித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. லேட்டஸ்டாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மோசடி செய்கிறார்கள். அதேபோல் கூகுள் பேவில் தவறாக பணம் அனுப்பியதாக கூறி மோசடி செய்கிறார்கள்.

ட்ரூ காலர் ஆப்

மோசடிகள் ஒருபுறம் எனில் , செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அவ்வப்போது அழைப்புகள் வந்து வீண் தொல்லை நடக்கிறது. கடன் வாங்குங்கள், கார் வாங்குங்கள், இணையதள இணைப்பு பெறுங்கள், நன்கொடை தாருங்கள், கிரெடிட் கார்டு வாங்குகள் என பல அழைப்புகள் வருகின்றன. ஆனால் யார் அழைக்கிறார்கள் என்பதை அறிய முடியாத நிலை இருப்பதால் பலர் ட்ரூ காலர் போன்ற ஆப்களை பயன்படுத்துகிறார்கள்.

சிம் கார்டு யாருடையது என பெயரும் வரும்

இந்த சூழலில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாக போகிறது.

கடிவாளம் வருகிறது

இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இந்த முடிவினை டிராய் எடுத்துள்ளதாம்.

6 மாதத்தில் வரலாம்

எனவே தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு அச்சமின்றி எடுத்து பேச முடியும். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த பேசி வருகின்றன. விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்க தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பானையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டியது கட்டாயம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+