Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக புகார் உள்ளது. திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட இது முக்கியமான பிரச்சனையாக இருந்தது. தவெக ஆட்சியிலும் அது தொடர்வதால், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். நேற்று சிங்கப் பெண் அதிரடி படை தொடக்க விழா நடைபெற்றது. சிங்கப்பெண் அதிரடி காவல்படை எப்படி செயல்படும் என்று ஐ.ஜி பவானீஸ்வரி விளக்கமளித்துள்ளார்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் விதம் குறித்து அந்தப் படையின் ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்களித்தார். அப்போது அவர் கூறுகையில், "பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெண்கள் அதிகம் பணியாற்றும் அனைத்து தொழிற்சாலை பகுதிகளில் சிங்கப் பெண் படையினர் ரோந்து பணியில் இருப்பார்கள். அவர்களை டிராக் செய்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதற்கு முன்பு எங்கெல்லாம் நடந்திருக்கிறது அல்லது நடைபெறலாம் என்பதை கண்டறிவார்கள்.

ig-bhavaneeswari-how-singappen-action-force-working-to-women-safety-said-ig-bhavaneeshwari

சிங்கப் பெண் படை செயல்படும் விதம்

அந்தப் பகுதிகளுக்கு சென்று குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை வேண்டுமோ அதை செய்வார்கள். அந்தப் பகுதி பெண்களுக்கு எப்படி பாதுகாப்பாகும் என்று மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட இதர துறைகளுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவோம். காவல்துறை மட்டுமல்லாமல், மற்ற துறைகள் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் பங்கு இருக்க வேண்டும்.

அப்படியிருந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதனால் விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவோம். மக்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து விழிப்புணர்வு செய்து பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவோம். மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதுகாப்பை உறுதி செய்வோம். சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்காக முதலமைச்சர் முதல்கட்டமாக ரூ.357 கோடி ஒதுக்கியுள்ளார்.

புதிய பணியிடங்கள்

இந்த சிறப்பு படை மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு புதிதாக 2,545 பணியிடங்கள் உருவாகியுள்ளன. இது அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளிட்டோரின் பணிக்கும் உதவியாக இருக்கும். குற்றம் நடக்க கூடாது என்பதற்காகவும், அதை முழுமையாக தடுப்பதற்காகவும் துடிப்புடன் செயல்படும் ஒரு படை தான் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+