கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்ட மக்களே உஷார்..வெளுக்கப்போகும் கனமழை..எச்சரிக்கும் வானிலை
சென்னை: கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சிவகங்கை,புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை 4ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. இம்மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அக்னி வெயிலின் அனலை தணிக்க கோடை மழை கொட்டி வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் நேற்றைய தினம் கனமழை கொட்டியது. இடி மின்னலுடன் கொட்டிய மழையால் பல ஊர்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்ப உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 7ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழை பற்றிய அறிவிப்பு ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மே 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் வங்கக்கடலில் வரும் 8ம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
-
தமிழகத்தில் உக்கிரம் காட்டிய வெயில்.. இன்று மட்டும் 13 இடங்களில் சதம்! அதிகபட்சம் எங்கேன்னு பாருங்க -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications