நிவருக்கு இடையே பவருக்காக கொட்டும் மழையில் பணி.. சென்னை ஒளிர பணியாற்றும் மின் ஊழியர்கள்!
சென்னை: நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் பல இடங்களில் மின்சாரம் கட்டாகி உள்ளது. பழுதான மின்மாற்றிகளை மாற்றி மின்சாரத்தை மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் கொட்டும் மழையில் மின் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
Recommended Video
சென்னையில் கனமழையால் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின்வாரியத்தினரை காய்ச்சி ஊற்றுவது நம் மக்களின் இயல்பாக உள்ளது.

ஆனால் பழுது காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.
சென்னையில் பல இடங்களில் மரம் விழுந்ததை போல் மின்கம்பங்கள் விழுந்து பழுதாகிறது. இதை சரி செய்யும் முயற்சியில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள்.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் கிருஷ்ணா நகர் 1வது மெயின் ரோட்டில் கனமழைக்கு நடுவே ஏடி வெங்கசேடன் மற்றும் ஏஇ பிரேமா ஆகியோர் மேற்பார்வையில் திருமலை மற்றும் சேகர் எல்லை ஆகிய இரண்டு பேர் அந்த பகுதியில் மின்கம்பங்களில் ஏற்பட்ட பழுதை நீக்க பணியாற்றி வருகிறார்கள்
இவர்கள் அந்த பகுதி முழுவதும் மின்சாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குகொணடுவர உழைத்து வருகிறார்கள். இவர்களை போல் சென்னை முழுவதும் பலர் மின்சாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர உழைத்துவருகிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் பொறுமை காக்க வேண்டும். புயலின் போதும், புயலுக்கு பின்பும் சென்னையை ஒளிர வைக்க பணியாற்ற போகிறார்கள்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications