உயிலை எழுத சரியான வயது என்ன? உயிலில் திருத்தம் செய்யலாமா? உயிலை எழுதும்போது இது ரொம்ப ரொம்ப அவசியம்
சென்னை: உயில் எழுதுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? உயிலை ரத்து செய்ய முடியுமா? எத்தனை முறை ரத்து செய்யலாம்? உயில்களில் திருத்தம் செய்யலாமா? இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
உயில் எழுதுவதென்பது, ஒருவரின் அடிப்படை உரிமையாகவும், அவரது கடைசி ஆசையாகவும் கருதப்படுகிறது. உயில் எழுதியதுமே, நம்பிக்கைக்குரிய 2 பேரிடம், இதுகுறித்து தெரிவிப்பது நல்லது.. இதனால், உரியவர்களிடம் உரிய நேரத்தில் உயில் வந்து சேரும்.

சொத்துக்கள்: 18 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும், தங்களுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். ஆனால், ஒருசில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும்..
உயிலை எழுதியதுமே, அதை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.. எனினும் நாளடைவில் உறவுகளுக்குள் தேவையில்லாமல் சிக்கல்களை, குழப்பங்களை எழுவதை இது தடுக்க உதவும்.. எனவே, சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதால் உயில்களை எழுதியதுமே அதை பதிவு செய்வது நல்லது.
உயில் நகல்: அத்துடன், உயிலின் நகலை பதிவு அலுவலகத்தில் கொடுத்துவிடுவது இன்னும் சிறந்தது. உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ, அங்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும்..
உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. ஒருவர் சாதாரண பேப்பர் முதல் பத்திர தாள்கள்வரை எதில் எழுதியிருந்தாலும் அந்த உயில் சட்டப்படி செல்லும்.. ஆனால், உயிலில் சொத்தின் விவரங்கள் தெளிவாக எழுதியிருக்க வேண்டும். முக்கியமாக, வேறு யாருக்காவது சொத்து கொடுத்திருந்தால், அதையும் உயிலில் தெளிவாக குறிப்பிட வேண்டும். உயில் சாசனத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்..
உயில் வாரிசுகள்: உயிலை கையில் எழுதுவது நல்லது.. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும், சிவில் வழக்கறிஞரை உடன் வைத்துக்கொண்டு உயில் எழுதினால் நல்லது. உயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் 2 சாட்சிகள் தேவை. வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் சாட்சிகளின் கையெழுத்து, அவர்களின் நிரந்தர அட்ரஸ் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஒருமுறை உயிலை எழுதிவிட்டால், அதை திருத்த முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஒருவர் எழுதிய உயிலை தாராளமாக திருத்தம் செய்யலாம்.. ரத்தும் செய்துவிடலாம்.. ஆனால், எத்தனை முறை திருத்தம் செய்தாலும், கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லுபடியாகும்.. ஒருவேளை, 18 வயது நிரம்பாத மைனர் மீது உயில் எழுதப்பட்டால், அதற்கு காப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.
கையெழுத்து: அதேபோல, உயில் எழுதியவர் அதில் திருத்தங்களை செய்தால், திருத்திய இடத்தில் தன்னுடைய கையெழுத்தை முழுதாகவோ, குறியீடாகவோ தெளிவாக குறிப்பிடப்படவில்லையானால், அந்த திருத்தத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது என்று சுப்ரீம்கோர்ட் கடந்த 2011ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்திருந்தது.
அதாவது, உயிலை எழுதியவர் அதில் திருத்தம் செய்வதாக இருந்தால், திருத்தி எழுதப்பட்ட வாசகங்களுக்கு அருகிலோ, அந்த பத்திரத்தின் பக்கவாட்டிலோ, கீழோ இடைவெளியில் தன்னுடைய கையெழுத்தை பதிவு செய்தால்தான், அது அவருடைய திருத்தம் என்று ஏற்றுக்கொள்ள முடியும் என்று கோர்ட் விளக்கியிருந்தது.
சுப்ரீம் கோர்ட்: அதுமட்டுமல்ல, உயிலை எழுதியவரால் திருத்தங்களை செய்ய முடியாமல், வேறொருவரை கொண்டு திருத்தம் செய்தால், அப்படி திருத்தியதற்கு நல்ல சாட்சிகளை வைத்து கொண்டு செய்ய வேண்டும். அதுவும் குறிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் அப்போது வலியுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications