Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு கையில காசு நிக்கணுமா? வரி தள்ளுபடி பெற இதோ சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே சம்பளம் வாங்குபவர்கள் முதல் தொழில் செய்பவர்கள் வரை அனைவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்வது வழக்கம்.. இதற்கு முக்கியக் காரணம் வருமான வரித் தாக்கல் மற்றும் வரிச் சேமிப்புக்கான காலக்கெடு முடிவடையப் போவதுதான்.. அதைப் பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்கப் போகிறோம்..

2024-25 நிதியாண்டு (அதாவது 2025 மார்ச் 31 வரை) முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய வருமான வரித் துறை பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.. குறிப்பாக, இந்த ஆண்டு வரித் தாக்கல் செய்வதற்கான புதிய ITR படிவங்கள் (ITR-1, ITR-2 உள்ளிட்டவை) முன்கூட்டியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.. இதில் நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடும், சேமிப்பும் மிகவும் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும் என்பதால் மக்கள் இப்போதே அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம்..

Income Tax Saving Tips Tax Refund Tax Saving Investments 2026 31

எல்ஐசி - வரிச்சலுகை

நீங்கள் பழைய வரி முறையை பின்பற்றுபவர் என்றால், மார்ச் 31ம் தேதிக்குள் உங்களது வரிச் சேமிப்பு முதலீடுகளை செய்து முடிக்க வேண்டும்.. எல்ஐசி, பொது வருங்கால வைப்பு நிதி அல்லது 5 ஆண்டு கால வங்கி வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் வரியை குறைக்க முடியும்..

ஆனால் பலரும் கடைசி நிமிடம் வரை காத்திருந்து மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் அவசர அவசரமாக முதலீடு செய்கிறார்கள்.. இதனால் சில நேரங்களில் வங்கி பரிவர்த்தனைகள் தோல்வியடைந்து, வரிச் சலுகையை பெற முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.. எனவே பிப்ரவரி மாத இறுதியிலேயே இதற்கான திட்டமிடலை தொடங்குவது புத்திசாலித்தனம்..

வருமான வரித்துறை

அதேபோல், இந்த ஆண்டு வருமான வரித் துறை வெளியிட்டுள்ள புதிய படிவங்களில் சில கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.. குறிப்பாக பங்குச் சந்தை முதலீடுகள், கிரிப்டோ கரன்சி மூலம் கிடைத்த லாபம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

தவறான தகவல்களை அளித்தால் அல்லது வருமானத்தை மறைத்தால் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரக்கூடும்.. இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால், உங்கள் Permanent Account Number (PAN) கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது..

வணிகர்கள் - ஜிஎஸ்டி வரி

சிறு குறு தொழில் செய்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கு மார்ச் மாதம் என்பது கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் காலமாகும்.. ஜிஎஸ்டி ரீஃபண்ட் மற்றும் வரி வரவுகளை சரியாக பெறுவதற்கு மார்ச் 31க்குள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் முடிப்பது நல்லது..

பாமர மக்கள் பலரும் வரி என்பது பெரிய விஷயம் என்று நினைத்து தள்ளிப் போடுகிறார்கள்.. ஆனால் சரியான நேரத்தில் வரி ஆலோசகரையோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தகவல்களைச் சேகரித்தால் தேவையற்ற அபராதங்களை தவிர்க்கலாம்.. அதுமட்டுமல்ல, கடின உழைப்பில் கிடைத்த பணத்தை வரியாகவோ அல்லது அபராதமாகவோ இழக்காமல் இருக்க, இந்த மார்ச் மாதக் கெடுவை ஒரு எச்சரிக்கையாக கருதி நாம் செயல்பட வேண்டியுள்ளது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+