88% அதிகரித்த ரியல் எஸ்டேட்.. சென்னையில் கண்ணை மூடிக்கொண்டு இங்கே வீடு வாங்குங்க.. பல கோடி லாபம்
சென்னை: 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சென்னையின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தை புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. முந்தைய காலாண்டை விட வீட்டுப் பதிவுகள் 88% அதிகரித்து உள்ளன.
தென்சென்னை 4,309 வீடுகள் பதிவு செய்யப்பட்டு முன்னிலை வகிக்கிறது,.வடசென்னை 1,518 வீடுகளுடன் இரண்டாம் இடத்தில உள்ளது, மீஞ்சூர் மற்றும் மாதவரம் போன்ற பகுதிகளில் புதிய வீடுகள் வாங்க மக்கள் காட்டும் ஆர்வம் காரணமாக அங்கே வீடுகள் அதிகம் வாங்கப்பட்டு உள்ளது.
சிட்டி அளவில், 8,042 வீடுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பரந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற மண்டலங்களில் தயாராக உள்ள வீடுகளும் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகிறது. வலுவான தேவை இங்கே அதிக விலையில் வீடுகள், நிலங்கள் விற்பனை ஆகின்றன.

மெட்ரோ பணிகள்
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் நிலமதிப்பு வெகுவாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பல்லாவரம்,
குரோம்பேட்டை,
திரு வி கா நகர்,
தாம்பரம்,
இரும்புலியூர்,
பெருங்களத்தூர்,
வண்டலூர்,
அண்ணா உயிரியல் பூங்கா,
கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் நிலம் மதிப்பு உயரும்.
எவ்வளவு மதிப்பு உயரும்?
பல்லாவரம் - 40- 50 % மதிப்பு உயரும்.
குரோம்பேட்டை - 25- 40 % மதிப்பு உயரும்.
திரு வி கா நகர் - 25- 40 % மதிப்பு உயரும்.
தாம்பரம் - 50-60% மதிப்பு உயரும்.
இரும்புலியூர் - 40- 50 % மதிப்பு உயரும்.
பெருங்களத்தூர் - 50-60% மதிப்பு உயரும்.
வண்டலூர் - 25- 40 % மதிப்பு உயரும்.
அண்ணா உயிரியல் பூங்கா - 40- 50 % மதிப்பு உயரும்.
கிளாம்பாக்கம் - 50-60% மதிப்பு உயரும்.
ஸ்ரீபெரும்புதூர்
விரைவுச் சாலையின் தொடக்கப் புள்ளியாகச் கருதப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே நிலக் கட்டணம் உயர தொடங்கி உள்ளது. இங்கே நிலத்தின் மதிப்பு 30% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எண்ணூர் துறைமுகம் மாமல்லபுரத்தில் இருந்து 133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டின் பெரும்பகுதி 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இங்கே நிலத்தின் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஒரகடம்
தொழில்துறை மையமாக அறியப்படும் ஒரகடம், எக்ஸ்பிரஸ்வேயால் இன்னும் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது வணிக மற்றும் குடியிருப்பு முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான இடமாக கருதப்படுகிறது. இங்கே நிலத்தின் மதிப்பு 40% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாம்பரம்
விரைவுச்சாலைக்கு அருகாமையில் உள்ளதால், தாம்பரம் விரும்பி வாங்கும் இடமாக மாற்ற வாய்ப்புள்ளது. இங்கே நிலத்தின் மதிப்பு 50% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ஓஆர்ஆர் சாலைக்கு அருகிலும் தாம்பரம் இருப்பதால் இங்கே நிலத்தின் மதிப்பு வேகமாக உயரும்.
பரந்தூர்
விரைவுச் சாலையில் இருந்து அருகில் இருப்பதால், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு பரந்தூர் முக்கிய இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே நிலத்தின் மதிப்பு 50% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications