கொரோனா பாதிப்புக்கு பிறகு மாரடைப்பு, நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகரிப்பு.. சவுமியா சுவாமிநாதன்
சென்னை: உலக சுகாதார் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பூசி செலுத்திய பிறகு மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் இந்த வைரஸ் ஒட்டு மொத்த உலகத்திற்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. கொரோனா பாதிப்பால் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு என எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

கொரோனா வைரஸ் பரவல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், மனதளவிலும் மக்களை கடுமையாக பாதிக்கப்படக் கூடியதாக கொரோனா பெருந்தொற்று மாறிப்போனது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அதிக அளவில் தடுப்பூசிகள் போடத் தொடங்கிய பிறகே வைரசின் வீரியம் குறையத்தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலின் வேகமும் தணியத்தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம்
சுமார் 2 ஆண்டுகளாக கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உலக சுகாதார் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பூசி செலுத்திய பிறகு மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.

4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது
இது தொடர்பாக அவர் கூறும் போது, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த எதிர்ப்பு சக்தியை கடக்கூடிய அளவுக்கு வைரைஸ் மாறுபாடு அடையும் சிறு ஆபத்து உள்ளது. எனவே, மாரடைப்பு, நரம்பு மண்டல செயல் இழப்பு போன்ற பல கொடிய நோய்களுக்கு கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பு காரணமாக இருக்கலாம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் இது 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமான ஒன்றாகும்" என்று கூறினார்.

மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது
முன்னதாக செளமியா சுவாமிநாதன் "மாஸ்க் அணிவதை பொருத்தவரை இப்போது அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதால் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை. காய்ச்சல் , ஜூரம், இருமல் வந்தால் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது. மாஸ்க் போடாமல் இருமினால் எந்த நோயாக இருந்தாலும் பரவ வாய்ப்புள்ளது. மாஸ்க் போடுவது சுவாசம் சம்பந்தப்பட்ட வைரஸ்கள் பரவுவதை தடுக்க உதவும். எனவே மாஸ்க் போடுவதை ஒரு பழக்கமாக கொள்வது நல்லதுதான். குறிப்பாக சில இணைநோய்கள் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது வெளியில் செல்வது அவர்களுக்கு நல்லது" இவ்வாறு அவர் கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications