கடந்த சில நாட்களாக வீசும் பலத்த காற்று.. தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் காற்றின் வேகம் கடந்த ஒருவார காலமாக அதிகரித்து காணப்படுவதால், காற்றாலை மூலம் செய்யப்படும் மின்னுற்பத்தி அளவும் அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கோடை காலம் தமிழகத்தில் நிலவி வந்தது.கடந்த 1 வாரமாக தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சற்று தணிந்தது. அவப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்நுகர்வு உள்ளது. ஆனால் இதற்கு இணையான மின்உற்பத்தி என்ற நிறைவு நிலையை எட்ட முடியாத சூழல் தொடர்ந்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, நீர்நிலைகள் அனைத்தும் முற்றிலும் வறண்டு விட்டதால், அவைகளில் இருந்து மின்னுற்பத்தி நடைபெறவில்லை. அதே நேத்தில் தமிழகத்தை பொருத்த வரை கோடைகாலம் இன்னும் முழுமையாக முடியாததால், மின்சாரம் அதிகளவில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக காற்றாலை மின்னுற்பத்தி கைகொடுக்காத நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவக்காற்று வீசத்துவங்கியுள்ளது. இதனால் தற்போது காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிக்க துவங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் சுமார் 7,913 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. கடந்த சில நாட்களாக சராசரியாக 2,000 முதல் 3,000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலை மின்னுற்பத்தி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பலத்த காற்று வீசி வருகிறது. ஆடி மாதம் துவங்க இன்னும் 15 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், காற்றின் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.
இதனால் காற்றாலை மின்னுற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக காற்றாலை மின்னுற்பத்தி 4,591 மெகாவாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காற்று அதிகமாக உள்ளதால் சராசரியாக ஒவ்வொரு காற்றாலையில் இருந்தும் நாளொன்றுக்கு 25 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்தால், அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 40,000 ஆயிரம் யூனிட் வரை ஒரு காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக காற்றாலை நிறுவனங்கள் கூறியுள்ளன.
காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர்ந்தால் அதனை தமிழக மின்வாரியம் முழுமையாக கொள்முதல் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications