என்னா மனுஷன்யா.. டெபாசிட் இழக்காத ஒரே சுயேச்சை.. ஹரி நாடார்தான்.. அதிக வாக்குகள் பெற்றவரும் அவரே!
சென்னை: டெபாசிட் இழக்காத ஒரே சுயேச்சை வேட்பாளர் ஆலங்குளத்தில் போட்டியிட்ட பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஹரிநாடார் ஆவார். இவர் அதிக வாக்குகளை பெற்ற சுயேச்சைகளின் பட்டியலிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
கொரோனாவுக்கு மத்தியில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. சென்னையில் மட்டும் 72.81 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 4.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தல் 107 கட்சிகளும் 2073 சுயேச்சைகளும் களமிறங்கினர். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் தற்போது இந்த எண்ணிக்கை அதிகமே.

இணையதளம்
இதில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து சில தகவல்கள் எடுக்கப்பட்டன. அதில் சுயேச்சைகளே போட்டியிடாத தொகுதிகளாக பவானிசாகர் தொகுதி உள்ளது. அது போல் அதிக எண்ணிக்கை அதாவது 77 சுயேச்சைகள் போட்டியிட்ட தொகுதியாக கரூர் தொகுதி உள்ளது.

3 வாக்குகள்
அதில் 19 பேர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கியவர்கள். இதில் சுயேச்சைகள் சக்திகுமார், செந்தில், மணிகண்டன் ஆகிய மூன்று தலா இரு வாக்குகளை வாங்கியுள்ளனர். அது போல் புஷ்பராஜ், மணிவண்ணன் ஆகிய இருவர் தலா 3 வாக்குகள் வாங்கியுள்ளனர்.

ஹரி நாடார்
இந்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் பட்டியலில் ஆலங்குளம் வேட்பாளர் ஹரி நாடார் முதலிடத்தில் உள்ளார். இவர் பனங்காட்டு படை கட்சியின் தலைவர். இவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 37,727 ஆகும். அந்த தொகுதியில் கிடைத்த வாக்குகளில் இவர் பெற்றது 18.54 சதவீதமாகும்.

திமுக, அதிமுக
ஒரு கட்டத்தில் ஆலங்குளத்தில் அதிமுகவின் மனோஜ் பாண்டியன், திமுகவின் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோருக்கு போட்டியாக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தாராம். பின்னர் பல சுற்றுகளின் முடிவில் அதிமுகவின் மனோஜ் பாண்டியன் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

டெபாசிட் இழக்காத வேட்பாளர்
ஹரிநாடாருக்கு அடுத்து சமூகநீதி கூட்டமைப்பின் புதுக்கோட்டை வேட்பாளர் பாலகிருஷ்ணன் 23,771 வாக்குகள் பெற்றுள்ளார். பின்னர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திருமயம் வேட்பாளர் செல்வக்குமார் 15144 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். சுயேச்சைகளில் டெபாசிட் தொகை இழக்காதே ஒரே வேட்பாளர் ஹரிநாடார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications