ஏர்போர்ஸுக்கு உதவ போகும் 2,250 கிலோ சாட்டிலைட்.. தெறிக்கவிடும் இஸ்ரோ பிளான்!
இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 'ஜிசாட்-7ஏ', செயற்கைகோள், வருகிற 19ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை: இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 'ஜிசாட்-7ஏ', செயற்கைகோள், வருகிற 19ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 'ஜி.எஸ்.எல்.வி- எப் 11' ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

2250 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இதில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும், இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
இந்த செயற்கைகோள் மூலம் இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இணைக்கலாம்.

'இன்சாட் 4சிஆர்' செயற்கைகோளின் ஆயுட்காலம் விரைவில் முடிகிறது, அதற்கு மாற்றாக 'ஜிசாட்-31' என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது கயானாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ஜிசாட் 7 மற்றும் ருக்மணி ஆகிய செயற்கை கோளை இந்திய கடற்படைக்காக இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி இருந்தது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications