Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே உதவும் குணத்தில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்களே! முஸ்லீம் லீக் பக்ரீத் பெருநாள் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகிலேயே உதவும் குணத்தில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள் தான் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பக்ரீத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தியாகத் திருநாளில் ஒற்றுமை பேணிடவும், ஒழுங்கு முறையில் வாழ்ந்திடவும்,அமைதியை உருவாக்கிடவும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவு பெருகிட பாடுபடவும், உறுதி ஏற்போம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Indian Union Muslim League President Kader Mohideen Bakrid wishes

இது தொடர்பாக காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;

''இன்றைய உலகில் வாழும் 800 கோடி மக்களில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாண்டு பக்ரீத் பண்டிகையை-ஈதுல் அல்ஹாவை-ஹஜ் பெருநாளை-தியாகத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்திய முஸ்லிம்கள், "ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா - பாருக்குள்ளே உள்ள நாடுகளில் சிறந்தது இந்தியா" என்று நம்பி வாழும் பெருங்கூட்டம் ஆகும்.
இந்தியா ஆன்மீக பூமி, அமைதியின் பிறப்பிடம்; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று பரப்புரை செய்யும் புண்ணிய பூமி, இங்கே வாழும் 4,698 வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் யாவரும், இந்திய மக்கள் ஆவர்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் உன்னதமான குடிமக்கள். இந்திய மக்களைப் போல் எங்கும் இல்லை; உலகில் வேறு எவரும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளவர்களே இந்த நாட்டு மக்கள். அங்கங்கே சிலர் சில வேண்டத்தகாத குழப்பங்கள் நிகழ்வதைக் கண்டு, இந்திய மக்களின் வாழ்வைப் பற்றி தவறான கருத்துச் சொல்லக்கூடாது.

இந்திய மக்கள் ஒருதாய் மக்கள்; பல மொழி, பலமதம், பல கொள்கை, பல கலாச்சாரம் உள்ளவர்கள்; ஆனால், மனிதநேயத்தில், மனிதாபிமானத்தில், உதவுவதில், உபசரிப்பதில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில், எல்லாருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள்தாம்.
இத்தகைய சிறந்த நாட்டு மக்களாக வாழும் முஸ்லிம் சமுதாயம், தனது ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறது. ஈத் பெருநாள் வாழ்த்துக்களை எல்லோருக்கும் கூறுவோம். இந்தியத் திருநாடு ஜி-20 தலைமை வகிக்கும் இந்த ஆண்டில் உலக அமைதிக்கும் குரல் கொடுத்து வருகிறது.

Indian Union Muslim League President Kader Mohideen Bakrid wishes

ரஷ்யா-உக்ரைன் போரால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானதாகும்.

இந்திய முஸ்லிம்கள் தங்களின் தியாகத் திருநாளில் செய்யும் பிரார்த்தனையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தொடரும் போரை நிறுத்திடவும், அமைதிவழியில் ஆக்கப்பூர்வ பயணத்தில் உலகை இட்டுச் செல்லவும் வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவோம். ரஷ்ய அதிபர் புதின், இந்திய முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் பிரார்த்தனைக்கு உடன்படவும் வேண்டுவோம்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+