உலகிலேயே உதவும் குணத்தில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்களே! முஸ்லீம் லீக் பக்ரீத் பெருநாள் வாழ்த்து!
சென்னை: உலகிலேயே உதவும் குணத்தில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள் தான் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பக்ரீத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தியாகத் திருநாளில் ஒற்றுமை பேணிடவும், ஒழுங்கு முறையில் வாழ்ந்திடவும்,அமைதியை உருவாக்கிடவும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவு பெருகிட பாடுபடவும், உறுதி ஏற்போம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;
''இன்றைய உலகில் வாழும் 800 கோடி மக்களில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாண்டு பக்ரீத் பண்டிகையை-ஈதுல் அல்ஹாவை-ஹஜ் பெருநாளை-தியாகத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்திய முஸ்லிம்கள், "ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா - பாருக்குள்ளே உள்ள நாடுகளில் சிறந்தது இந்தியா" என்று நம்பி வாழும் பெருங்கூட்டம் ஆகும்.
இந்தியா ஆன்மீக பூமி, அமைதியின் பிறப்பிடம்; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று பரப்புரை செய்யும் புண்ணிய பூமி, இங்கே வாழும் 4,698 வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் யாவரும், இந்திய மக்கள் ஆவர்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் உன்னதமான குடிமக்கள். இந்திய மக்களைப் போல் எங்கும் இல்லை; உலகில் வேறு எவரும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளவர்களே இந்த நாட்டு மக்கள். அங்கங்கே சிலர் சில வேண்டத்தகாத குழப்பங்கள் நிகழ்வதைக் கண்டு, இந்திய மக்களின் வாழ்வைப் பற்றி தவறான கருத்துச் சொல்லக்கூடாது.
இந்திய மக்கள் ஒருதாய் மக்கள்; பல மொழி, பலமதம், பல கொள்கை, பல கலாச்சாரம் உள்ளவர்கள்; ஆனால், மனிதநேயத்தில், மனிதாபிமானத்தில், உதவுவதில், உபசரிப்பதில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில், எல்லாருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள்தாம்.
இத்தகைய சிறந்த நாட்டு மக்களாக வாழும் முஸ்லிம் சமுதாயம், தனது ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறது. ஈத் பெருநாள் வாழ்த்துக்களை எல்லோருக்கும் கூறுவோம். இந்தியத் திருநாடு ஜி-20 தலைமை வகிக்கும் இந்த ஆண்டில் உலக அமைதிக்கும் குரல் கொடுத்து வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் போரால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானதாகும்.
இந்திய முஸ்லிம்கள் தங்களின் தியாகத் திருநாளில் செய்யும் பிரார்த்தனையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தொடரும் போரை நிறுத்திடவும், அமைதிவழியில் ஆக்கப்பூர்வ பயணத்தில் உலகை இட்டுச் செல்லவும் வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவோம். ரஷ்ய அதிபர் புதின், இந்திய முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் பிரார்த்தனைக்கு உடன்படவும் வேண்டுவோம்.''
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications