192 பயணிகள்! மும்பை - சென்னை வந்த விமானம்! ஓடுபாதையில் வால்பகுதி உரசி தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு
சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு 192 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும் போது வால் பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வால் பகுதி உரசியது தொடர்பாக விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
நாட்டிலேயே மிகவும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருவதும் போவதும் என எப்போதுமே பரபரப்பாக கட்சியளிக்கும். இந்த சூழலில் நேற்று சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்தது. ஏ 320 ரக விமானமான இந்த விமானத்தில், 192 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் வழக்கம் போல நேற்று தரையிறங்கும் போது அதன் வால்பகுதி ரன்வேயில் உரசியுள்ளது. இதனால் தீப்பொறி கிளம்பியிருக்கிறது. உடனே சுதாரித்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு மேற்கோண்டு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவாறு சாதுர்யமாக விமானத்தை லேண்டிங் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மார்ச் 8 ஆம் தேதி இண்டிகோ ஏர்பஸ் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையில் உரசியது. இதையடுத்து விமானத்தில் உரிய பழுது பார்ப்பு பணிகள் முடிந்து பறப்பதற்கான தகுதி சான்று பெறப்பட்டது. பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். உயர்தர பாதுகாப்புடன் நாங்கள் விமானங்களை இயக்கி வருகிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இதே விமானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் தரையிறங்கும் போது வால் பகுதி உரசியது. அதன்பிற்கு விமானம் நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் மீண்டும் விமானம் பறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. கடந்த 18 மாதங்களில் 8 முறை இண்டிகோ விமானங்கள் வால் பகுதி உரசிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த தொடர் நிகழ்வுகள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications