192 பயணிகள்! மும்பை - சென்னை வந்த விமானம்! ஓடுபாதையில் வால்பகுதி உரசி தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு
சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு 192 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும் போது வால் பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வால் பகுதி உரசியது தொடர்பாக விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
நாட்டிலேயே மிகவும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருவதும் போவதும் என எப்போதுமே பரபரப்பாக கட்சியளிக்கும். இந்த சூழலில் நேற்று சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்தது. ஏ 320 ரக விமானமான இந்த விமானத்தில், 192 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் வழக்கம் போல நேற்று தரையிறங்கும் போது அதன் வால்பகுதி ரன்வேயில் உரசியுள்ளது. இதனால் தீப்பொறி கிளம்பியிருக்கிறது. உடனே சுதாரித்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு மேற்கோண்டு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவாறு சாதுர்யமாக விமானத்தை லேண்டிங் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மார்ச் 8 ஆம் தேதி இண்டிகோ ஏர்பஸ் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையில் உரசியது. இதையடுத்து விமானத்தில் உரிய பழுது பார்ப்பு பணிகள் முடிந்து பறப்பதற்கான தகுதி சான்று பெறப்பட்டது. பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். உயர்தர பாதுகாப்புடன் நாங்கள் விமானங்களை இயக்கி வருகிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இதே விமானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் தரையிறங்கும் போது வால் பகுதி உரசியது. அதன்பிற்கு விமானம் நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் மீண்டும் விமானம் பறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. கடந்த 18 மாதங்களில் 8 முறை இண்டிகோ விமானங்கள் வால் பகுதி உரசிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த தொடர் நிகழ்வுகள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications