இண்டிகோ விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! சென்னையில் அதிகாலை 3 மணி முதல் தொடங்கியது சேவை!
சென்னை: சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது. விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
டெல்லி உள்ளிட்ட விமனா நிலையங்களிலும் இண்டிகோ விமான சேவை குறைந்த விமானங்களுடன் நடந்து வருகிறது. நீண்ட இடையூறுக்குப் பிறகு இண்டிகோ விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், விமானங்களின் நிலையை அறிந்த பிறகு, பயணத்தை உறுதி செய்யுமாறும் பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் இண்டிகோ விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு, விமானி மற்றும் ஊழியர் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்சனை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
சென்னையில் மூன்றாவது நாளாக இண்டிகோ விமானங்களின் சேவை நேற்று பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை 62 விமானங்கள் ரத்தான நிலையில், 62 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை இண்டிகோ விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் தவித்தனர். விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து முறையான அறிவிப்பு வழங்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.
தலைநகர் டெல்லியில் இருந்து 225 இண்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோன்று, பெங்களூரில் 102 விமானங்கள், மும்பையில் 104 விமானங்கள், ஹைதராபாத்தில் 92 விமானங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.
சென்னை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் இண்டிகோ சேவை நள்ளிரவு வரை முடங்கியது. ஏர் இந்தியா, ஸ்பை ஜெட் நிறுவன விமானங்கள் மட்டுமே இயங்கியதால், விமான பயண கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. சென்னை- கோவைக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தான நிலையில், பயணிகளிடம் இண்டிகோ நிறுவன சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் மன்னிப்பு கோரினார். நாள்தோறும் சுமார் 2,300 விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. அதில் கிட்டத்தட்ட பாதி விமானங்களின் சேவைகள் கடந்த சில நாள்களாகவே முடங்கியுள்ளதால் இந்திய விமான போக்குவரத்து துறையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்று விளக்கம் அளித்தார்.
வரும் டிசம்பர் 10 முதல் 15 ஆம் தேதிக்குள் தங்கள் நிறுவனத்தின் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் பயணிகளுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் அறிமுகப்படுத்திய FDTL எனப்படும் விமான கடமை நேர வரம்பு விதிமுறைகளே முக்கிய காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், விமானிகளுக்கு வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாய ஓய்வு என்ற விதிமுறையை மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications