சென்னை விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய.. இந்தோனேசிய ராணுவ விமானம்! பரபரப்பு!
சென்னை: சென்னையில் இந்தோனேசியா நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கியிருக்கிறது. முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ராணுவ விமானம் தரையிறங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான எப்.35 போர் விமானம் திடீரென தரையிறங்கியிருந்து. அந்நிய நாட்டின் போர் விமானம் திடீரென தரையிறங்கியதால், மொத்த நாடும் உட்சபட்ச அலர்ட் மோடுக்கு சென்றது. பின்னர் விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் இந்தோனேசிய ராணுவத்திற்கு சொந்தமான ஹெர்குலஸ் சி-130 ரக போர் விமானம் தரை இறங்கியிருக்கிறது. ஆனால் விமானிகளின் ஓய்வுக்காக சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், விமானிகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
சென்னையில் தரையிறங்கிய ஹெர்குலஸ், போர் விமானமாக இருந்தாலும் பெரும்பாலும் ஆயுதங்கள் உள்ளிட்ட சரக்குகளை கையாளவே பயன்படுத்தப்படுகிறது.
பூமியின் தென் அரைக்கோளம் பகுதியில் தற்போது 'பிட்ச் பிளாக்' கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, புரூணை, கனடா, ஃபிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 4,435 பேர், 140 விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த விமானங்கள் வானில் எரிபொருளை நிரப்புவது, போர் விமானங்களை கூட்டு பயிற்சி செய்து பார்ப்பது, 20 நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு கலந்தாலோசனைகளை மேற்கொள்வது இவற்றை உள்ளடக்கியதுதான் 'பிட்ச் பிளாக்' கூட்டுப் பயிற்சி ஆகும். தென் அரைக்கோள பகுதி எனில், ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கமான பகுதியாகும். எனவே பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பும்போது ஓய்வு பெற சென்னையில் இந்தோனேசியா விமானம் தரையிறங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications