அடையாளம் பிட்டு கூட தெரிய கூடாது...ரெட்டிக்கு ரெட்கார்டு போட்ட மாஜி மணல் மாஃபியா சேகர் ரெட்டி
சென்னை: தமது சுய அடையாளம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தமது பெயரின் பின்னால் வரக் கூடிய ரெட்டி என்பதை ஆதார் முதல் அத்தனை ஆவணங்களிலும் கட் செய்துவிட்டாராம் மாஜி மணல் மாஃபியா சேகர் ரெட்டி எனும் ஏ.ஜெ.சேகர்.
சேகர் ரெட்டி... அதிமுக ஆட்சிக் காலத்தில் மணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். மாஜி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிழலாக இருந்தவர்.
2016-ல் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். மேலும் புதிய ரூ2,000 நோட்டுகள் அச்சிடப்படும் என அறிவித்தார்.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் ஒட்டு மொத்த தேசமும் அல்லோகலப்பட்டது. வங்கிகள், ஏடிஎம்களில் பல மணி நேரம், நாட்கள் கணக்கில் காத்து கிடக்க வேண்டியது. ஒட்டுமொத்த நாடும் இயல்பு வாழ்க்கையை தொலைத்தது. இந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல மாதங்களாகிப் போயின.

மலைக்க வைத்த பணக்கட்டுகள்
அப்போது தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சேகர் ரெட்டியிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அத்தனை மக்களையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அதுவரை அரிதான ஒன்றாகப் பார்க்கப்பட்ட ரூ2,000 நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின. மொத்தம் ரூ9.63 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள். மேலும் 96.89 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளும் சேகர் ரெட்டியிடம் சிக்கின. செல்லாது நோட்டுகள் என்று பேசத் தொடங்கினாலே சேகர் ரெட்டிதான் நினைவுக்கு வருகிற அளவுக்கு மக்கள் மனதில் ஆழப் பதிந்து போய்விட்டது.

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய வழக்கில் சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையானார் சேகர் ரெட்டி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சேகர் ரெட்டி சந்தித்தார். ஆனால் சேகர் ரெட்டி என்ற பெயரில் இல்லாமல் தொழிலதிபர் சேகர் என்ற பெயருடன் சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் மணல் விவகாரம் சேகர் ரெட்டி கைக்குப் போகப் போகிறது என்கிற பேச்சு எழுந்தது. ஆனால் சேகர் ரெட்டியோ இனி மணல் தொழிலிலேயே ஈடுபடப் போவதில்லை என அறிவித்தார்.

ரெட்டியை கட் செய்த சேகர்
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக மீண்டும் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். ஆனால் அதிலும் சேகர் ரெட்டி எனக் குறிப்பிடாமல் சேகர் என்றே அந்த அறிவிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சேகர் ரெட்டி என்றாலே மணல் மாஃபியா, புதிய ரூபாய் நோட்டுகள் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறது. அதனால் இனி ரெட்டி என்ற பெயரே போடக் கூடாது என ஆதார் முதல் அத்தனை அரசு ஆவணங்களிலும் ரெட்டியை கட் செய்துவிட்டாராம். அவரது ஆதார் அடையாள அட்டையிலும் ஏ.ஜே. சேகர் என்றுதான் மாற்றப்பட்டுள்ளதாம். அந்த பழைய அடையாளம் துளிகூட வரக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறாராம் சேகர் ரெட்டி சாரி ஏ.ஜே.சேகர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications