பெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்!
Recommended Video

சென்னை: எதில்தான் புதுமை புகுத்துவது என்ற வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது.
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் 5 சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிப்படுவது வழக்கம்.

இந்த மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அசைவ பிரியர்கள் தங்கள் வாயை கட்டிக் கொண்டு அமைதியாக இருப்பர். ஆனால் புரட்டாசி மாதம் போய்விட்டது என்று தெரிந்தால் போதும். அவர்கள் சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பர்.
[அலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி!]
இந்நிலையில் நேற்றுடன் புரட்டாசி முடிந்துவிட்டது. இந்த சந்தோஷத்தை இப்படியா கொண்டாட வேண்டும். பெண் ஒருவர் தனது பிளவுஸுக்கு பின்னால் பெருமாளின் படத்தை டிசைன் செய்துள்ளார். இதை பார்க்கும் போது புரட்டாசி முடிஞ்சி போச்சு, தேங்க் யூ பெருமாளே என கூறுவது போல் உள்ளது.
இது... pic.twitter.com/khjflDt5ez
— சினிமாக்குத்தூசி (@litmuci) October 15, 2018
அதே போல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால் இங்கு பாருங்கள். இத்தனை நாட்கள் ஜன்னல், கதவு, காரிடார் என டிசைன் செய்த பெண்கள் கோயில் கோபுரத்தையும் விட்டு வைக்கவில்லை. புதுமையை புகுத்துவதற்கென்று ஒரு அளவில்லையாம்மா உங்களுக்கு!












Click it and Unblock the Notifications